நன்றி மறவாதீர்கள்
UPDATED : ஜன 04, 2015 | ADDED : ஜன 04, 2015
* நேர்மையான எண்ணம் உங்களுக்கு மட்டுமின்றி பிறருக்கும் சந்தோஷத்தைக் கொடுக்கும். * பொய்யான விஷயத்தை அறவே பேசாதீர்கள். உண்மையானதையும், பயனுள்ளதையும் மட்டுமே பேசுங்கள். * உங்களுடைய பேச்சின் மூலம், ஒருவரை அடுத்தவருக்கு எதிராக திருப்ப முயலாதீர்கள். * எதில் ஈடுபட்டாலும் ஆர்வத்துடன் செய்யுங்கள். அதுவே வாழ்வை அர்த்தமுள்ளதாக்கும். * தர்மம் ஒன்றையே புகலிடமாகக் கொள்ளுங்கள். செய்த நன்றி மறவாது மனம் திறந்து பாராட்டுங்கள்.- புத்தர்