நியாயத்தைச் சொல்
UPDATED : நவ 15, 2015 | ADDED : நவ 15, 2015
* ஒரு பிரச்னையில் முதலில் இரு தரப்பினையும் பொறுமையாக விசாரி. தீர யோசித்த பின் நியாயத்தைச் சொல்.* நோயற்ற வாழ்வே பெரிய பாக்கியம். திருப்தியே பெரிய செல்வம். நம்பிக்கைக்குரியவரே நல்ல உறவினர்.* எதிர்க்கும் ஆற்றல் இருந்தாலும், பிறர் செய்யும் பிழைகளைப் பொறுத்துக் கொள்பவனே நல்லவன்.* விரோத மனப்பான்மை இல்லாமல் எதைச் செய்தாலும் அது தடையின்றி முழுமையாக நிறைவேறும்.* பிறருக்குப் போதனை செய்வதை விட, தன்னைப் பண்படுத்திக் கொள்ள முயல்வதே நற்பண்பாகும்.-புத்தர்