மகிழ்ச்சி நிழலாய் தொடரட்டும்
* உடல், மனம், நாக்கு இம்மூன்றையும் அடக்கி வாழும் அறிவாளிகளே உண்மையான அடக்கம் கொண்டவராவர். *வாய்மையை உங்களால் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும் அதில் நம்பிக்கை கொள்ளுங்கள். அதன் இனிமை கசப்பானது என்று கருதினாலும் அதை உறுதியாக நம்புவதை மட்டும் கைவிடாதீர்கள்.* தூய்மையான எண்ணத்துடன் ஒருவன் பேசினாலும் செயல்புரிந்தாலும், அவனை விட்டு விலகாத நிழல் போல, மகிழ்ச்சி அவனைப் பின் தொடர்ந்து செல்கிறது. * போரில் ஆயிரம் பேரை அழித்து வெல்பவனை விட தன்னைத்தானே அடக்கி வென்றவனே உயர்தரமான வெற்றியாளன்.*புதிதாய்க் கறந்த பசும்பாலைப் போல பாவச் செயல்கள் உடனேயே புளிப்பாக மாறிவிடுவதில்லை. நீறுபூத்த நெருப்பைப் போல உள்ளூரக் கனன்று கொண்டேயிருந்து மனிதனைப் பற்றுகிறது.* அறிவுக்கூர்மையும், நேர்மையும் உறுதிப்பாடும் உள்ளவராய் உங்களோடு ஒத்துப்போகக் கூடியஒரு துணை கிடைத்தால் அவரை வழித்துணையாய்க் கொண்டு, அவரைப் பின்பற்றிச் செல்லுங்கள்.- புத்தர்