உள்ளூர் செய்திகள்

நல்லதை நினை மனமே!

* அறிவும், ஒழுக்கமும் நிறைந்த நல்லோர் நட்பைத் தேடிச் சென்று பெற்றுக் கொள்ள வேண்டும். * முட்டாளிடம் நட்பு கொள்வதை விட ஒருவன் தனித்து இருப்பதே சிறப்பானது. * அறிவாளியின் நட்பு நல்ல உறவினர் போல உதவியாக இருக்கும். முட்டாளின் நட்போ துன்பத்தை வரவழைக்கும். * எதிரிக்கும் கூட நல்லதை நினைப்பவனே நல்ல மனம் படைத்தவன். * தக்க சமயத்தில் உதவி செய்பவனே சிறந்த தோழன். அவனுடைய நட்பை விட்டுவிடுவது கூடாது. -புத்தர்