இதமாகப் பேசுங்கள்
UPDATED : ஆக 31, 2014 | ADDED : ஆக 31, 2014
* பிறருக்கு நன்மையும், ஆறுதலும் அளிக்கின்ற செயல்களில் மட்டும் ஈடுபடுங்கள்.* ஈகை இன்பமே மேலான இன்பம். கொடுத்து மகிழ்பவர்கள் இப்பிறப்பிலும் மறுமையிலும் நல்வாழ்வு பெறுவர்.* மனதை உள்நோக்கித் திருப்புங்கள். உங்களின் குறைகள் உங்களுக்குத் தெரிய வரும்.* உலகம் உள்ள வரை இன்பம், துன்பம் இரண்டும் இருந்து கொண்டு தான் இருக்கும்.* வீணாக ஆயிரம் வார்த்தைகள் கூறுவதை விட, மனதிற்கு இதம் தரும் ஒரு சொல் உயர்வானது.- புத்தர்