நன்மைக்கு எல்லையில்லை
UPDATED : மார் 19, 2015 | ADDED : மார் 19, 2015
* அதிகாரத்தால் மற்றவரை அடக்காதீர்கள். அன்பால் அனைவரையும் அரவணைத்து செல்லுங்கள். * நல்ல வழியில் நிர்வகிக்கப்பட்ட மனம் மனிதனைச் செம்மைப்படுத்தும். அதனால் வரும் நன்மை எல்லையற்றது. * அறிஞர்களின் உறவை நாடிச் செல்லுங்கள். அது உயர்வுக்கு வழிவகுக்கும். * பொறாமையை முளையிலேயே கிள்ளி எறியுங்கள். எப்போதும் அமைதியில் திளைப்பீர்கள். * பேராசையில் சிக்க வேண்டாம். உங்களை நீங்களே விழிப்புடன் பாதுகாத்துக் கொள்ளுங்கள். -புத்தர்