இவை இரண்டும் கண்கள்
UPDATED : ஏப் 13, 2015 | ADDED : ஏப் 13, 2015
* காலத்தை வீணாக்காமல் அறிவின் துணையால் உண்மையை அறியுங்கள்.* தீய எண்ணத்தை பகைவர்களாகக் கருதி அதனுடன் போரிட்டு வெல்லுங்கள்.* உடலுக்கு புலன்கள் கட்டுப்பாடும் மனநலனுக்கு நல்ல சிந்தனையும் தேவை.* பயன் விளையும் என தெரிந்தால் மட்டும் பேசுங்கள். இல்லாவிட்டால் அமைதியைக் கடைபிடியுங்கள்.* காலம் காலமாகச் சொல்லப்பட்டது என்பதற்காக ஒரு விஷயத்தை ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை.* மனச்சுத்தம், நேர்மை இரண்டும் நம் கண்கள். இதன் உதவியுடன் உழைத்தால் நல்வாழ்வு கிடைக்கும்.-புத்தர்