உள்ளூர் செய்திகள்

மனதில் ஒளி பிறக்கட்டும்

* கடவுளுக்குரிய அருவ நிலையில் சிறப்பிடம் பெறுவது ஒளி வழிபாடு. நம் உள்ளத்தில் ஒளி வடிவில் திகழும் இறைவனையே தீபாவளி நன்னாளில் வழிபாடு செய்கிறோம்.* தீபாவளித் திருநாளில் தீபம் ஏற்றுவது முக்கியம். திருவிளக்கின் ஐந்து முகங்களும் ஐந்து புலன்களைக் குறிக்கிறது. விளக்கின் சுடர் வெளிச்சத்தைத் தருவது போல் ஐம்புலன்களும் நல்வழியில் செலுத்தப்பட்டு பயனுடையதாக இருக்க வேண்டும்.* நம் மனம் பாவங்களிலிருந்து நீங்கி, தெய்வபக்தியில் உறுதியுடன் ஈடுபட வேண்டும் என்பதையே கிருஷ்ணரின் நரகாசுர வதம் நமக்கு உணர்த்துகிறது.* விலங்கு நிலையில் இருந்து நீங்கி நாம் தெய்வீக இயல்பைப் பெற வேண்டும் என்பதே தீபாவளியின் நோக்கம். இந்த தத்துவத்தை உணர்ந்து வாழத் துவங்கிவிட்டால் ஆன்மிக வலிமையை அடைந்து விடலாம்.- கமலாத்மானந்தர்