நல்ல புத்தியை கொடு
UPDATED : ஏப் 20, 2015 | ADDED : ஏப் 20, 2015
* உடல், உடை தூய்மை அவசியம் தேவை. அதை விட மனத் தூய்மைக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.* உண்மை, துணிவு, விட்டுக்கொடுத்தல், இனியசொல் போன்ற நல்ல பண்புகளை மனிதன் வளர்த்துக் கொள்ள வேண்டும்.* நல்ல புத்தியைக் கொடுக்கும்படி தினமும் ஐந்து நிமிடமாவது பிரார்த்தனை செய்வது அவசியம்.* நம் தாயும், தந்தையுமாக கடவுள் இருக்கிறார். அவருக்கு நன்றி செலுத்துவதே பக்தி.* உனக்கு நீயே மனதில் கட்டுப்பாட்டை விதித்துக் கொள். அடக்கமுடன் வாழ முயற்சி செய்.-காஞ்சிப்பெரியவர்