உள்ளூர் செய்திகள்

தெய்வபக்தி மனிதனுக்கு அவசியம்

* வெறிநாய் போல நாலா திசையிலும் மனம் தறி கெட்டு ஓடிக் கொண்டிருக்க கூடாது. தியானம் மூலம் அதை ஒருமுகப்படுத்த வேண்டும்.* மரத்திற்கு தண்ணீர் விடுவதும், மிருகங்களுக்கு உணவு அளிப்பதும் உயர்வான தர்மம் என நீதி சாஸ்திரம் கூறுகிறது.* பிறர் துன்பப்படும் போது பணம், உடல் உழைப்பு, வாக்கு ஆகியவற்றால் முடிந்த உதவியைச் செய்வது நம் கடமை.* வறட்டுத் தனமாக கடமையில் மட்டும் ஈடுபடுவது கூடாது. தெய்வ பக்தியும் மனிதனுக்கு மிக அவசியம்.-காஞ்சிப்பெரியவர்