ஒழுக்கமாக இருப்போமே!
UPDATED : ஜூன் 20, 2014 | ADDED : ஜூன் 20, 2014
* எந்த செயல் செய்தாலும் அதில் ஒழுங்குமுறையுடன் ஈடுபடுவது அவசியம். * வாழ்வில் ஒழுக்கம் இருந்து விட்டால், அது எல்லா விஷயத்திலும் பிரதிபலிக்கத் தொடங்கி விடும். * ஆசை வயப்பட்டு செய்யும் செயல்கள் மனிதனை பாவச் சேற்றில் தள்ளி விடும். * துன்ப சிந்தனையால், மனம் பாரமாகும் போது, ஞானம் என்னும் தண்ணீருக்குள் அமுக்கி விடுங்கள். மனம் லேசாகி விடும். * மனம் தூய்மை அடையவும், பாவம் நீங்கவும் ஒரே வழி தியானத்தில் ஈடுபடுவது தான். - காஞ்சிப்பெரியவர்