சிக்கனமாக இருப்போமே!
UPDATED : டிச 11, 2012 | ADDED : டிச 11, 2012
* விஞ்ஞானத்தால் வளர்ச்சி ஒருபுறம் இருந்தாலும் மற்றொரு பக்கத்தில் ஆபத்தும் வளர்ந்து கொண்டே போகிறது. மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர்ந்தால் தான் இந்த ஆபத்து மறையும்.* செய்யும் செயலை பற்றின்றிச் செய்தால் ஒழுக்கம் வளரும். உள்ளமும் தூய்மை பெறும். பற்றின்றிச் செய்ய பகவானின் பாதங்களைப் பற்றிக் கொள்ள வேண்டும்.* எவ்வளவு குறைவாகச் செலவழிக்க முடியுமோ, அந்த அளவு சிக்கனம், எளிமையைப் பின்பற்ற வேண்டும். அதில் மிச்சப்படும் பணத்தை தர்மத்திற்காகச் செலவழிக்க வேண்டும்.* மக்கள் எந்த நிலையில் இருந்தாலும் சரி, அந்த இடத்தில் இருந்தே அவர்களை முன்னுக்கு அழைத்துச் செல்ல வேண்டியது தான் தலைவர்களின் கடமை.* வாழ்வில் ஒழுக்கம் ஏற்பட்டு விட்டால் அதன் பின் நாம் ஈடுபடும் ஒவ்வொரு விஷயத்திலும் அந்த ஒழுக்கத்தின் அழகைக் காண முடியும். - காஞ்சிப்பெரியவர்