கடவுளிடம் சொல்வோமே!
UPDATED : செப் 29, 2013 | ADDED : செப் 29, 2013
* நீருக்குள் வாளியை இழுக்கும்போது கனம் தெரிவதில்லை. அதுபோல, துன்பம் ஏற்படும் போது ஞானம் என்னும் தண்ணீருக்குள் அமுக்கிவிடுங்கள். கனம் குறைந்து மனம் லேசாகி விடும்.* நாம் இந்த மண்ணில் பிறவி எடுத்து விட்டோம். யாராக இருந்தாலும் ஒருநாள் உயிர் போகத் தான் போகிறது. வாழும் காலத்திற்குள் நம் பாவத்தைப் போக்கிக் கொள்ள முயற்சிப்போம்.* பாவத்தைப் போக்குவதற்கு எங்கும் அலையத் தேவையில்லை. இருந்த இடத்திலேயே கடவுளின் பெயரைச் சொன்னாலே போதும். இரண்டெழுத்தான 'சிவ' என்பதை எப்போதும் சொல்லுங்கள்.* அன்னதானத்தால்மட்டுமே ஒருவரை முழுமையாகத் திருப்திப்படுத்த முடியும். மற்றவை எல்லாம் எவ்வளவு கிடைத்தாலும் மனம் திருப்தி அடைவதில்லை.* துன்பத்தை பிறரிடம் சொல்லாமல் இருக்க முடியாது. கடவுளிடம் முறையிட்டால் நிம்மதி கிடைக்கும்.- காஞ்சிப்பெரியவர்