உயிர்கள் உன்னை வணங்கும்
UPDATED : டிச 20, 2016 | ADDED : டிச 20, 2016
* தர்ம வழியில் நடந்தால் உலகிலுள்ள உயிர்கள் அனைத்தும் வணங்கிப் போற்றும். அதர்மத்தை பின்பற்றினால் உடன் பிறந்தவனும் எதிரியாவான்.* வாரத்தில் ஒருநாளாவது கோவில் வழிபாடு செய்வது அவசியம்.* சாப்பிடும் முன் பறவைகள், விலங்குகளுக்கு இயன்ற அளவில் உணவு அளிப்பது நல்லது.* தவறு செய்யாதவன் யாருக்கும் பயப்படத் தேவையில்லை. அவன் முகத்தில் பிரகாசம் நிறைந்திருக்கும்.- காஞ்சிப் பெரியவர்