உள்ளூர் செய்திகள்

பெற்றவர்கள் நம் தெய்வங்கள்

* அரசியல், பொருளாதாரம், சமூக சீர்திருத்தத்தால் தேசிய ஒருமைப்பாடு ஏற்படாது. அனைவரும் ஈசனின் குழந்தைகள் என்ற பக்தியினால் தான் மக்களை ஒன்று சேர்க்க முடியும்.* உண்மையான கல்வி அறிவை மட்டும் வளர்ப்பதோடு நிற்காமல், நற்குணங்களின் வளர்ச்சிக்கும் வழி செய்ய வேண்டும்.* பெற்றோரை இறைவனாக நினைக்க வேண்டும். அதுபோல், இறைவனையும், இறைவியையும் பெற்றோரின் வடிவங்களாக நினைக்க வேண்டும்.* கட்டுப்பாடு இருந்தால் தான் ஒழுக்கத்தோடு முன்னேற முடியும். கட்டுப்பட்டு நடப்பதற்கு அடக்கம் வேண்டும். அகங்காரம் போனால் தான் அடக்கம் வரும்.* ஆசையும், காமமும் புனிதமில்லை, அன்புதான் புனிதம், அதனால் தான் அன்பே சிவம் என்று கூறுகிறோம்.* 'தானம் கொடுத்தோம்' என்ற வார்த்தையை தவிர்த்து, 'பகவான் கொடுக்கும்படி வைத்தான், கொடுத்தோம்,' என்று அடக்கமாகக்கொடுக்க வேண்டும்.- காஞ்சிப்பெரியவர்