உலகம் நம் குடும்பம்
UPDATED : ஏப் 01, 2014 | ADDED : ஏப் 01, 2014
* உலகம் பெரிய குடும்பம். அதன் தாயும் தந்தையுமாக இறைவன் இருக்கிறான்.* நாம் கடவுளின் குழந்தைகள் என்பதால், நாம் அனைவருமே சகோதரர்கள் என்பதை உணர வேண்டும்.* உடல் ஆரோக்கியம், உடைத் தூய்மை இந்த இரண்டையும் விட முக்கியமானது மனத் தூய்மை.* சத்தியம், மனதைரியம், விட்டுக் கொடுக்கும் சுபாவம், இனிய சொல் ஆகிய நல்லபண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.* கடவுளின் அருளை நினைத்து நன்றி செலுத்துவதே மனதை தூய்மைக்கும் சிறந்த வழியாகும்.- காஞ்சிப்பெரியவர்