திருப்தியுடன் வாழ்வோம்
UPDATED : ஏப் 24, 2015 | ADDED : ஏப் 24, 2015
* மனம் எதை தீவிரமாகச் சிந்திக்கிறதோ, அதுவாகவே மாறும் தன்மை கொண்டது.* கடவுளிடம் இருந்து பிரிந்து வந்துள்ள நாம், பிறவியின் முடிவில் அவரிடமே ஐக்கியமாக முயல வேண்டும்.* பிறர் துன்பத்தைப் போக்க நம்மால் ஆன உதவியைச் செய்வது அவசியம்.* ஆடம்பரமாக உண்பதும், உடுத்துவதும் மட்டுமே தரமான வாழ்வாகாது. இருப்பதில் திருப்தியுடன் வாழ்வதே சிறந்தது.* எப்போதும் மனதில் அது வேண்டும், இது வேண்டும் என்று சிந்தித்துக் கொண்டிருப்பவனே பரமஏழை.-காஞ்சிப்பெரியவர்