உள்ளூர் செய்திகள்

பொறுமையைக் கடைபிடிப்போம்

* நியாயமான ஆசைகளை மனதில் வளர்த்து, அவற்றை வேண்டுதல்களாக இறைவன் முன் வைத்து, அவற்றை அடைவதற்கான முயற்சிகளை செய்கிறவனுக்கு இறைவனின் அருளாசி கிடைக்கும்.* அற்ப விஷயத்திற்காக கோபப்பட்டால் உலகிற்கு வழிகாட்டியாக இருக்க முடியாது என்பதால், பொறுமையோடு இருந்து அவர்களை மன்னிக்க வேண்டும். * பிறரது குற்றம் குறைகளைக் காணாதீர்கள். அவைகளைக் கேட்கவோ, பேசவோ செய்யாதீர்கள். அனைவரிடமும் அனைத்திலும் நல்லவற்றையே காண முயலுங்கள். பிறரது தவறுகளைப் பொருட்படுத்தாமல் அவர்களுக்கு சேவை செய்யுங்கள்.* வாழ்க்கையின் சுமை அனைத்தையும் இறைவனிடம் ஒப்படைத்து அர்ப்பண மனப்பான்மையுடன் வாழ்ந்தால் கவலை இருக்காது. கடவுளும் நம்மைக் காத்தருள்வார்.* இறைவனைத் தஞ்சமடைந்தால் ஆன்மிக வளர்ச்சியும், வாழ்க்கைக்கு தேவையான பொருள்களிலும் முன்னேற்றம் ஏற்படும். - மாதா அமிர்தானந்தமயி