உள்ளூர் செய்திகள்

மனதிலே உறுதி கொள்!

* அனைவரும் போற்றும் விதத்தில் உயர்வாழ்வு வாழ வேண்டுமானால், கணப்பொழுதைக் கூட வீணாக்குவது கூடாது. * உள்ளத்தூய்மையே ஒழுக்கத்தின் உயிர்நாடி. உண்மையைப் பின்பற்றினால் உள்ளம் தூய்மையுடன் விளங்கும். * பிறருக்கு உரியவற்றை அவருடைய அனுமதியின்றி அனுபவிக்க முயல்வது நல்ல பண்பு அல்ல. * யாருக்கும் நான் இனி தீங்கு செய்ய மாட்டேன் என மன உறுதி எடுத்துக் கொள்ளுங்கள். * இளமையும், அழகும் என்றென்றும் நிலைத்திருக்கும் என்று மனிதன் கர்வம் கொள்வது கூடாது. - மகாவீரர்