உள்ளூர் செய்திகள்

சொர்க்கம் கிடைக்குமா?

* உண்மை வழியில் நடப்பவனுக்கு எவ்வித உபதேசமும் தேவைப்படாது.* சொல்லக் கூடாத விஷயமாக இருந்தால் அதை ஒருவரிடமும் சொல்லாமல் இருப்பதே நல்லது.* மவுனமாக தியானம் பழகி வந்தால், மனம் கலங்காத நிலையை அடைய முடியும்.* செய்த பாவத்திற்குரிய தண்டனையை அனுபவிக்காமல் சொர்க்க வாழ்வை ஒருவன் அடைய முடியாது.* ஏமாற்றுதல் என்பது சிறிய முள்ளைப் போன்றது. ஆனால், அதை பிடுங்கி எறிவது கடினமானது.- மகாவீரர்