அளந்து பேசுவது நல்லது
UPDATED : டிச 11, 2012 | ADDED : டிச 11, 2012
* உயர்ந்தவர்களிடம் கொண்ட நட்பு உண்மையானதாக இருக்கும். ஆனால், தாழ்ந்தோர் நட்போ வைக்கோல் மீது பிடித்த நெருப்பு போல அழித்து விடும்.* பிறரை ஏமாற்றுபவன், தீய வழியில் சம்பாதிப்பவன், தன்னையே புகழ்ந்து கொள்பவன் பைத்தியக்காரனுக்குச் சமமானவர்கள்.* பொறுமையற்றவர்கள் சுயநலக்காரர்கள். அவர்கள் தங்கள் காரியம் முடியும் வரை எதுவும் செய்வார்கள்.* தீ எல்லாப் பொருளையும் எரித்துவிட்டு, தானும் அழிந்து போவதைப் போல கோபமும் மனிதனை அழித்த பின்னரே அடங்கும். * இனிமையாகப் பேசுங்கள். கடுஞ்சொற்களை மறந்தும் பேச முற்படாதீர்கள். தேவையறிந்து மிக அளவாகப் பேசுங்கள்.* நினைவு எப்போதும் உயர்வானதாக இருக்க வேண்டும். தீய எண்ணங்களில் மனதை உழலவிடக் கூடாது. * மனதில் உறுதி இருந்தால் மட்டுமே துன்பத்தைத் தாங்கிக் கொள்ளும் ஆற்றல் இருக்கும். - மகாவீரர்