தாய்மையே சிறந்தது
UPDATED : ஜன 19, 2014 | ADDED : ஜன 19, 2014
* தியானத்தில் உள்ளம் கரைந்து உருகினால் கடவுளின் அருளை நிச்சயமாகப் பெற முடியும்.* கடவுளை அவரவர் விரும்பிய வடிவில் வழிபாடு செய்யலாம். இருந்தாலும், தாய்மையின் வடிவமாக வழிபடுவதே எளிதானது. * ஒரு விஷயத்தைக் கவுரவித்தால் ஒழிய, அதன் உண்மையை நம்மால் அறிய முடியாது.* துக்கப்படுவதால் பிரச்னைகள் தீர்ந்து விடுவதில்லை.* தவறைத் திருத்திக் கொள்வதால் எந்த அவமானமும் நேராது.- ராஜாஜி