உள்ளூர் செய்திகள்

நம்பிக்கையுடன் இரு!

* கடவுளைச் சரணடைந்தவனுக்கு வாழ்வில் தளர்ச்சியே உண்டாவதில்லை.* மனிதனின் நம்பிக்கை தீவிரமாகி விட்டால் அவன் விருப்பம் விரைவில் நிறைவேறி விடும். * பணத்தால் மனிதனின் குணம் மாறி விடும். அதனால், அதில் அதிக நாட்டம் வைப்பது நல்லதல்ல.* உடலால் துன்பம் நேர்ந்தாலும், உண்மையான பக்தனின் மனதை துன்பம் நெருங்க முடியாது.* கடவுளைப் பற்றிய உண்மையை உணர்ந்தவன் எப்போதும் மகிழ்ச்சியில் திளைப்பான்.-ராமகிருஷ்ணர்