எல்லாம் அவன் செயல்
UPDATED : நவ 04, 2012 | ADDED : நவ 04, 2012
* மேகம் சூரியஒளியை மறைப்பது போல அகங்காரம் என்னும் மனமாசு ஈஸ்வரஜோதி நம்முள் பிரகாசிப்பதைத் தடுக்கிறது. * 'என் செயலாவது யாதொன்றும் இல்லை! எல்லாம் அவன் செயல்!,'என்ற எண்ணம் மனதில் நிலைக்குமானால் இந்தப் பிறவியிலேயே முக்தி கிடைத்துவிடும்.* தற்பெருமை உள்ளவர்களிடம் இறையருள் தங்கியிருப்பதில்லை. பணிவுள்ளவர்களின் உள்ளத்தையே இறைவன் தன் இருப்பிடமாக கொண்டிருக்கிறான்.* மனிதப்பிறவி கிடைப்பதற்கு அரியது. இதில், இறைவனை அறிய முயலாவிட்டால் வாழ்நாள் வீணாகப் போய்விடும்.* தராசின் முள் கனமான தட்டை நோக்கி சாய்வது போல, மனிதனின் மனம் ஆசைகளால் கனக்கும்போது இறைவனை விட்டு விலகத் தொடங்கிவிடும்.* கர்வம் நமக்கு உண்டாகுமானால் 'நான் இறைவனின் தொண்டன். நான் இறைவனின் குழந்தை' என்ற நினைவால் மட்டும் ஏற்படுவதாக இருக்கட்டும்.- ராமகிருஷ்ணர்