கஷ்டப்படுபவர்களுக்கு உதவுங்கள்
<P><BR>* மனிதர்கள் பெண்ணாசையும், பணத் தாசையும் கொண்டவர்களாக இருக் கின்றனர். இந்த எண்ணமே தீராத நோயாக அவர்களைப் பீடித்திருக் கிறது. இதிலிருந்து விடுபட நல்லவர் களோடு பழகுவது தான் சரியான தீர்வு.<BR><P>* சிலருடைய உள்ளம் கல்சுவர் போல உறுதியாக இருக்கும். அதில் ஆணி அடித்தால் அது வளைந்து போகும். அதுபோல, எவ்வளவு முயன்றாலும் அவர்களுக்குள் ஆன்மிக விஷயம் எதுவும் உள்ளே போகாது.<BR><P>* பணம் அளவுக்கு அதிகமாக வைத்திருப்பவர்கள் <BR><P>தங்களுடைய செல்வத்தை சுயநலத்தால் தனக்காகவே வைத்துக் கொண்டிருக்கக் கூடாது. கஷ்டப்படுகிற ஜனங்களுக்கு உதவி புரிய வேண்டும். <BR><P>* மீன்கொத்திப்பறவை போன்று உலகத்தில் வாழ்ந் திருங்கள். அது நீருக்குள் மூழ்குகின்ற போது, சிறகுகளில் கொஞ்சம் நீர் ஒட்டிக் கொண்டிருக்கும். வெளியில் வந்து சிறகுகளைக் குலுக்கியதும் அந்த நீரும் அகன்றுவிடும். அதுபோல உலகியலில் ஈடு பட்டாலும் பற்றற்று இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.</P>