சொன்னதைக் காப்பாற்று!
UPDATED : நவ 20, 2014 | ADDED : நவ 20, 2014
* மனம் என்னும் பாத்திரத்தை பிரார்த்தனை மூலம் துலக்கினால் தூய்மையுடன் இருக்கும்.* கடவுளின் திருநாமத்தை தினமும் ஓதினால், பாவம் அனைத்தும் ஓடி விடும்.* ஒரு மனிதனின் மனநிலைக்கு ஏற்பவே அவனுடைய வாழ்வியல் சூழ்நிலையும் அமைகிறது.* சொன்ன வார்த்தையை மனிதன் காப்பாற்ற வேண்டும். இல்லாவிட்டால் நம்பகத்தன்மை அற்றவனாகி விடுவான்.* கடவுள் ஒருவரே நம்முடைய ஒரே பலம். அவரில்லாமல் நம்மால் எதுவும் செய்ய இயலாது.- ராமகிருஷ்ணர்