உள்ளூர் செய்திகள்

முதலில் கடவுளைத் தேடு

* முதலில் கடவுளைத் தேடு. அதன்பின், உலகப் பொருட்களை தேடி செல்லலாம். * எல்லா மனிதர்களிடத்திலும் கடவுள் இருக்கிறார். ஆனால், கடவுளிடத்தில் எல்லா மனிதர்களும் இருப்பதில்லை.* மனிதப்பிறவி கிடைப்பதற்கு அரிதானது. இதை பயன்படுத்தி கடவுளை அறிய முற்படுங்கள்.* கடவுளின் திருநாமத்தை இடைவிடாது ஜெபித்தால் உடல், மனம் எல்லாம் துாய்மை பெறும். * நம்பிக்கை ஆழமானால் கடலையும் தாண்டலாம். ராம நாமத்தின் மீது கொண்ட நம்பிக்கையால் அனுமன் இதை சாதித்தான்.-ராமகிருஷ்ணர்