நல்வழியில் நடப்போம்
UPDATED : பிப் 01, 2017 | ADDED : பிப் 01, 2017
* கடவுள் எப்போதும் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்ற எண்ணத்துடன் நல்வழியில் நடக்க வேண்டும்.* பணம், பதவி, படிப்பு இவற்றால் கடவுளை அடைய முடியாது. தூய்மையான அன்புக்கு மட்டுமே அவர் கட்டுப்படுகிறார்.* வாழ்விற்கு பணம் அவசியம் என்றாலும், அதற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பது கூடாது.* கடவுளுக்கும், அவருடைய திருநாமத்திற்கும் சிறிதும் வித்தியாசம் கிடையாது.- ராமகிருஷ்ணர்