கடவுளைத் தேடிச் செல்
UPDATED : அக் 12, 2015 | ADDED : அக் 12, 2015
* கடலை நோக்கி ஓடும் நதி போல, கடவுளைத் தேடுவதில் ஆர்வம் கொள்.* செய்யும் எந்த செயலும், மனதை மாசுபடுத்தாமல் இருக்கும் விதத்தில் பார்த்துக் கொள்.* பிறர் பாராட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் எந்த பணியிலும் ஈடுபட வேண்டாம்.*செல்வம் இல்லாத நிலையை வறுமை என நினைக்காதே. அறியாமையே மிகக் கொடிய வறுமை.*நோய்க்கு சிறிதும் இடம் அளித்து விடாதே. ஆரோக்கியம் இருந்தால் மட்டுமே, மனிதன் வாழ்க்கையை ரசித்து வாழ முடியும்.- சாந்தானந்தர்