உலகம் திருந்த வழி
UPDATED : ஜூலை 12, 2015 | ADDED : ஜூலை 12, 2015
* காணும் உயிரை எல்லாம் சிவமாக கருது. கடைசியில் சிவமாக மாறி விடுவாய்.* பணம் இல்லாமையே வறுமை என்றனர். உண்மையில் கடவுளைப் பற்றி அறியாமல் இருப்பதே கொடிய வறுமை.* நோய்க்கு இடம் கொடுக்காதே. நோய் உள்ளவனால் கடவுளை வழிபட முடியாது.* தூய்மையைத் தேடி அலைய வேண்டாம். மனதை துாய்மையாக்கி விட்டால் உலகமே திருந்தி விடும்.* கனவிலும் கடவுளை மறக்காதே. மறந்தால், உயிரற்ற ஜடப் பொருளாகி விடுவாய்.* ஐம்புலன்களில் நாவை முதலில் அடக்கி விட்டால் மற்றவை தானே அடங்கி விடும்.-சாந்தானந்தர்