உயர்ந்தவற்றுக்கே ஆசைப்படுங்கள்
UPDATED : ஜூன் 19, 2014 | ADDED : ஜூன் 19, 2014
* ஒரு புத்திசாலி மனிதர், தன் வாழ்க்கையில் நடக்கும் அனைத்தையுமே தன் வளர்ச்சிக்கான வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்வார்.* தனக்குள் சரியான சூழ்நிலையை மட்டும் உருவாக்கிவிட்டால் ஆனந்தமாகவும், உள்நிலையில் நலமாகவும் வாழும் ஆற்றல் ஒவ்வொருவருக்கும் உண்டு.* நம் ஒவ்வொரு செயலினாலும், நம் ஒவ்வொரு எண்ணத்தினாலும், நம்முள் நாம் உருவாக்கிக் கொள்ளும் ஒவ்வொரு உணர்வினாலும் நம்மைச் சுற்றி சிறப்பான சூழ்நிலையை நம்மால் உருவாக்க இயலும்.* ஆசைப்படுங்கள், வாழ்வின் மிக உயர்ந்தவற்றிற்கு ஆசைப்படுங்கள். உங்கள் முழு ஆர்வத்தையும் அத்திசையில் செலுத்துங்கள்.சத்குரு ஜக்கிவாசுதேவ்