கடவுளுக்கு இதுவே மகிழ்ச்சி
UPDATED : டிச 21, 2014 | ADDED : டிச 21, 2014
* அறிவோடு செயல்படும் போது தான் பிழைகளை அகற்ற முடியும். இதையே அறிவியலும் ஏற்றுக் கொள்கிறது.* உன்னை நீயே வெறுப்பது கூடாது. வெறுப்பினால் அழிவுக்குரிய வாசல் திறந்து விடப்படுகிறது.* தாய், தந்தையரை ஒருவன் மகிழ்ச்சிப்படுத்தி விட்டால் கடவுளே மகிழ்ச்சியில் திளைக்கிறார்.* அன்பின் அடிப்படையில் செய்யப்படும் எந்த ஒரு செயலின் முடிவும் ஆனந்தத்தில் நிறைவு பெறும்.* பெற்றுக் கொள்வதில் எந்த பெருமையும் இல்லை. கொடுத்து மகிழ்பவனே பேறு பெற்றவன்.- விவேகானந்தர்