கொடுத்து மகிழுங்கள்
* பணம் செலவழியும் முன் மகிழ்ச்சியுடன் தர்மம் செய்யுங்கள்.* சமாதானம் மூலம் சண்டையை தவிருங்கள்.* இறைநினைவுடன் இருப்பவர் முகத்தில் ஒளி உண்டாகும்.* மற்றவரிடம் உள்ள குறைகளை மட்டுமே காண்பது இழிவானது.* கடனை திருப்பி செலுத்த கூடுதல் கவனம் செலுத்துங்கள்.* காலம் வீணாகும் முன் நற்செயலில் விரைந்து ஈடுபடுங்கள்.* உண்மையை மட்டும் பேசுங்கள்* கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்* உங்களின் உள்ளங்களையும், செயல்களையுமே இறைவன் கவனிக்கிறான்.* நானே பெரியவன், சிறந்தவன் என்னும் அகந்தையை கைவிடுங்கள்.* அநியாயமாகவும், கெட்ட வழியிலும் பொருளைத் திரட்டாதீர்கள். * நம்பிக் கொடுத்த பொருளை திருப்பிக் கொடுங்கள்.* வெற்றி பெறுவதற்காக இறைவனை அதிகம் தியானியுங்கள்.* எந்த பிரச்னையையும் நாசூக்காக கையாளுங்கள்.* நீங்கள் செய்ததே சரி என பிடிவாதம் பிடிக்காதீர்கள். - நபிகள் நாயகம்