போதுமென்ற மனம் வேண்டும்
UPDATED : டிச 17, 2020 | ADDED : டிச 17, 2020
* போதும் என்ற மனதுடன் வாழ்பவருக்கு நிம்மதி இருக்கும்.* உழைத்து தேடிய பொருளில் குடும்பத்தினருக்கு செலவழியுங்கள்.* பக்கத்து வீட்டினர் மீது அன்பு காட்டுங்கள். * இறைவனைப் பற்றிய எண்ணம் இதய அழுக்கைப் போக்கும்.* ஏழைகளை நேசிப்பது சொர்க்கத்தின் திறவு கோல்.* நதிக்கரையில் இருந்தாலும் கூட தண்ணீரை வீணாக்காதீர்.* தேவைக்கு மேல் பணம் சேர்க்க வேண்டாம்.* பெருமைக்காக ஆடை அணிந்தால் வறுமை உண்டாகும்.* வீண் செலவும், ஆடம்பரமும் இல்லாத முறையில் உண்ணுங்கள்.* நல்ல எண்ணத்தால் சிறிய நன்மைகளும் பெரிய நன்மைகளாக மாறி விடும்.* கடன் கொடுத்து உதவுவதும் தர்மமே.* சண்டை சச்சரவை சமாதானம் மூலம் தீர்க்க முயலுங்கள்.- நபிகள் நாயகம்