உள்ளூர் செய்திகள்

21ஐ விடுங்க! ஆயிரத்தை பிடியுங்க!

தீய குணங்கள் என்ன என்பதை அடையாளம் கண்டு ஒதுக்கி விட்டால், நல்லது தானாக நடந்து விடும். குர்ஆன் படம் பிடித்துக் காட்டும் தீயகுணங்கள் சிலவற்றில், ஏதாவது ஒன்று கூட இல்லாமல் மனிதர்கள் இருக்க மாட்டார்கள். ஏன் அந்த ஒன்றும் நம்மிடம் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்? அதை இனம் கண்டு விட்டால், அதையும் ஒதுக்கி விடலாம் இல்லையா? 1. தற்பெருமை கொள்ளுதல்2. பிறரைக் கொடுமை செய்தல்3. கோபப்படுதல்4. பிறரைப் போலவே வாழ ஆசைப்பட்டு அதற்கேற்ப பாவனை செய்தல்.5. பிறர் துன்பத்தைக் கண்டு சந்தோஷப்படுதல்6. பொய் பேசுதல்7. கெட்ட சொற்களைப் பேசுதல்8. நல்லவர் போல் நடிக்கும் இரட்டை வேட மனப்பான்மை9. புறம்பேசுதல்10. தகாதவர்களுடன் சேருதலும், ஆதரவு கொடுத்தலும்11. பாரபட்சமாக நடத்தல்12. பொருத்தமற்றவர்களை புகழ்ந்து பேசுதல்13. பொய்சாட்சி கூறுதல்14. எளியோரையும், வலிமை குறைந்தோரையும் கேலி செய்தல்15. வாக்குறுதியை மீறுதல்16. சண்டை, சச்சரவு, வாக்குவாதம் செய்தல்17. குறை கூறுதல்18. வதந்தி பரப்புதல்19. கோள் சொல்லுதல்20. பொறாமைப்படுதல்21. பெண்களை தீய நோக்குடன் பார்த்தல்.இந்த குணங்களை விட்டுவிட்டால், ஆயிரம் நல்ல குணங்கள் நம்மிடம் வந்து ஒட்டிக்கொள்ளுமே!