நிம்மதியாக வாழுங்கள்
UPDATED : மே 16, 2020 | ADDED : மே 16, 2020
* போதும் என்ற மனதுடன் வாழ்பவருக்கு நிம்மதி உண்டாகும்.* தேவைக்கு மேல் அதிகமாக பொருளை சேர்க்க வேண்டாம்.* பிறரிடம் யாசகம் கேளாமல் உங்களைக் காத்துக் கொள்ளுங்கள்.* உழைத்து தேடிய பொருளில் குடும்பத்தினருக்கு செலவழியுங்கள்.* பக்கத்து வீட்டினர் மீது அன்பு காட்டுங்கள். * இறைவனைப் பற்றிய நினைவு இதய அழுக்கைப் போக்கும்.* உறவினரை அலட்சியம் செய்தால் அன்பை இழக்க நேரிடும். * கொடையாளியின் உணவு மருந்தாகும். கஞ்சனின் உணவு நோயாகும்.* செல்வந்தர்களை அலட்சியம் செய்யாதீர். உலகத்தை இழந்து விடுவீர்.* சொர்க்கத்தில் இருந்து வந்தது அத்திப்பழம். அதை அதிகம் உண்ணுங்கள்.* வெறும் வயிற்றில் பேரிக்காயை உண்டால் இதயம் பலம் பெறும்.* குடும்பத்தினரை அலட்சியம் செய்யாதீர். சுகமான வாழ்வை இழப்பீர்.பொன்மொழிகள்