உள்ளூர் செய்திகள்

உங்களில் சிறந்தவர்

* நற்குணம் கொண்டவரே உங்களில் சிறந்தவராவார். * நம் உருவத்தையோ, செல்வத்தையோ இறைவன் பார்ப்பதில்லை. உள்ளத்தையும், செயலையும் பார்க்கின்றான்.* ஒரு வினாடி நேர நல்ல சிந்தனை, ஓராண்டு கால இறைவணக்கத்தை விட சிறந்தது. * நல்ல எண்ணத்துடன் இருப்பதுகூட தர்மம் தான்.* எளிமையாக வாழ்வதே இறைநம்பிக்கையின் அடிப்படை.* உண்மை பேசுபவன் நன்மையின் பக்கம் செல்கிறான். நன்மை அவனை சொர்க்கத்திற்கு அழைத்து செல்கிறது.* பெற்றோரின் பிரியத்தில் தான் இறைவனின் பிரியமும் இருக்கிறது. * நல்ல எண்ணத்துடன் செய்யும் சிறிய உதவிக்கு பெரிய பலன் கிடைக்கும். - பொன்மொழிகள்