உள்ளூர் செய்திகள்

நாயகத்தின் பொன்மொழிகள்

* எடுக்கும் தாழ்ந்த கையை விட கொடுக்கும் உயர்ந்த கைகள் மேலானவை.* நீங்கள் உண்மை பேசுவதைக் கடைபிடிப்பீர்களாக. ஏனென்றால், நிச்சயமாக அது சொர்க்கத்து வாசல்களில் ஒன்றாகும். நீங்கள் பொய் பேசுவது பற்றி எச்சரிக்கின்றேன். ஏனெனில், அது நரக வாசல்களில் ஒன்றாகும்.* நிச்சயமாக அல்லாஹ் ரோஷமுள்ளவன். அவன் எதனை விலக்கி உள்ளானோ, அதனை மனிதன் செய்யும் போது ரோஷம் அடைகின்றான்.* திருமணம் என்பது ஊழியமாகும். ஒருவர் தம் மகளை எங்கே ஒப்படைக்கின்றோம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.* திருமணம் செய்ய வசதியிருந்தும் திருமணம் செய்யாதவன் என்னைச் சார்ந்தவன் இல்லை.