மூன்று முறை
UPDATED : நவ 21, 2024 | ADDED : நவ 21, 2024
நபிகள் நாயகத்துடன் வண்டியின் பின்னால் அமர்ந்து பயணம் செய்தார் முஆத் பின் ஜபல். அப்போது மூன்று முறை அழைத்து, ''முஆதே! நான் சொல்வதை கவனமாக கேளுங்கள். இறைவனுக்கு மட்டுமே கட்டுப்பட வேண்டும். அவனுக்கு இணை வேறில்லை'' என்றார். மூன்று முறை அழைத்தது ஏன் தெரியுமா... இந்த முக்கிய விஷயத்தை உமக்கு தெரிவிக்க வேண்டும் என்பது தான். அப்போது தான் மறக்காது.