போதுமென்ற மனம்
UPDATED : மார் 20, 2025 | ADDED : மார் 20, 2025
இயற்கை வளங்கள் அனைவருக்கும் பொதுவானது. அதை தனக்கு மட்டுமே சொந்தம் என மனிதர்கள் ஒவ்வொருவரும் நினைக்கும்போது தான் பிரச்னை உருவாகிறது. இப்படி அவரவர் தங்களால் முடிந்தளவுக்கு தங்களுக்கென சேர்த்துக் கொள்வதால் வளம் ஒருபுறமும், வறுமை மறுபுறமும் என உலகம் தத்தளிக்கிறது. இதைத் தடுக்க வேண்டுமானால் போதும் என்ற மனமும், எல்லோரும் நலமாக வாழ வேண்டும் என்ற எண்ணமும் வேண்டும்.