உண்மையை விட்டு விலகாதீர்கள்
UPDATED : ஜன 07, 2022 | ADDED : ஜன 07, 2022
இன்று பொய் பேசுவது என்பது பலரது வாழ்க்கையில் வாடிக்கையாகிவிட்டது. இதுகுறித்து நாயகம் சொல்வதை கேளுங்கள். “உண்மை பேசுபவர்களையே இறைவனுக்கு பிடிக்கும். உண்மை பளுவானது. அதனால் தான் அதை சுமப்பவர் சிலராக இருக்கின்றனர். 'உலக விவகாரங்களில் உண்மையாக நடந்து கொண்டாயா' என்று இறந்தபின் நம்மிடம் கேள்வி கேட்கப்படும். உண்மையை விட்டு விலகாதீர்கள்.