உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : அதிகரிக்கும் கல்லீரல் புற்றுநோய்

அறிவியல் ஆயிரம் : அதிகரிக்கும் கல்லீரல் புற்றுநோய்

அறிவியல் ஆயிரம்அதிகரிக்கும் கல்லீரல் புற்றுநோய்உடலில் நச்சுக்களை நீக்குதல், சீரான ரத்த சர்க்கரை அளவு உள்ளிட்டவை கல்லீரலின் பணி. இந்நிலையில் உலகில் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர் எண்ணிக்கை, தற்போதைய நிலையில் நீடித்தால் 2050ல் இரட்டிப்பாகும் என 'தி லான்செட்' ஆய்வு எச்சரித்துள்ளது. ஆண்டுதோறும் 9 லட்சம் - 15 லட்சம் பேர் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல், சிகிச்சை பெறுவதன் மூலம் கல்லீரல் புற்றுநோய் எண்ணிக்கையில், 60 சதவீதம் தடுக்க முடியும். கல்லீரல் பாதிப்புக்கு 21% மது அருந்துதல் காரணமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

sivan
ஆக 03, 2025 02:48

திரும்ப திரும்ப மது அருந்துதல் காரணம் என்ற பத்தாம் பசலித் தனமான காரணத்தை உங்கள் நிருபர் எழுதுவது வருந்த தக்கது.. இப்போதெல்லாம் கல்லீரல் புற்று நோய் ..சர்வ சாதாரணமாக பெண்களையும் தாக்குகிறது . காரணம் தவறான உணவுப் பழக்கம்.. கல்லீரல் கொழுப்பு படிவது.. , அசாதாரணமான உடல் எடை , அதிகப்படி எடையுடன் கூடிய சர்க்கரை நோய், மஞ்சள் காமாலை நோய் தாக்கம் ... போன்ற காரணங்கள் . ஒரு செய்தியை பிரசுரித்தால்... முறையாக விசாரித்து முழுமையான தகவலுடன் .. செய்தி கொடுக்க வேண்டும்.


முக்கிய வீடியோ