வாசகர்கள் கருத்துகள் ( 4 )
மக்கள்தொகை அடர்த்தி அடிப்படையில் சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் மெட்ரோ ரயில் ஏற்புடையது. அது ஏற்கனவே, செயல்வடிவம் பெற்று வெற்றிகரமாக இயங்குகிறது. ஆனால், பா.ஜ.க கட்சிக்கு ஒட்டு கிடைக்குமென்ற காரணத்திற்காக, விதிமுறைகளை மீறி, தேவையில்லாமல் மதுரையிலும் கோவையிலும் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவர வேண்டும் என்று விரும்புவது ஏற்புடையதல்ல. அதுவும், மதுரைக்கு இப்போதைக்கு தேவை, நல்ல உள்கட்டமைப்பும், சென்னை, கோவையை போன்ற தொழில் நிறுவனங்களும் தான். எனினும், கோயம்புத்தூர் நகரம் அதிவேகமாக வளர்ந்து வருவதால், எதிர்காலத்தில், மெட்ரோ ரயில் விதிமுறைகளுக்கு உட்பட்டு, மெட்ரோ ரயில் அமைய வாய்ப்புண்டு.
கொடுத்தா இது ஒட்டு அரசியல் என டி கடை பெஞ்சில் பெருசுகள் பேசனும்னு உங்களுக்கு டவுட்டு வரவில்லையா ?
வாக்கு அரசியலாகவே இருக்கட்டுமே ?? மக்களுக்கு நல்லது நடந்தால் சரிதான் என்பதுதானே?? பெரியோரின் வாக்கு?? தவறை தட்டி கேட்க வக்கில்லாமல் பேசி என்ன பயன்??
"மக்களுக்கு நல்லது நடந்தால் சரிதான் என்பதுதானே?" எது நல்லதுங்கிறீங்க ? அந்த காலத்துல பொதுத்துறை நிறுவனங்களை ஆரம்பிச்சு, அவை நஷ்டத்துல ஓடினாலும் பரவாயில்லை, தொகுதி மக்களுக்கு நிரந்தரமா வேலை உண்டு அப்படிங்கறதாலே, அவற்றை இயங்க விட்டு, மக்களின் தலையில் அந்த நஷ்டத்தை அவங்களுக்கே தெரியாம சுமத்தினாங்களே, அந்த நல்லதா? மெட்ரோ ப்ராஜெக்ட்டுக்கு தகுதியாக அந்த நகரங்கள் இருக்கின்றன என்பதை நிரூபிக்க வேண்டியது யாரோட பொறுப்பு? இந்த பதில் தனபாலுக்கும் சேத்துதான் ....
மேலும் செய்திகள்
டவுட் தனபாலு
18-Nov-2025