உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / அரசு பள்ளிகளில் விதிமீறும் மாணவர்கள்; செய்வதறியாது திணறும் ஆசிரியர்கள்

அரசு பள்ளிகளில் விதிமீறும் மாணவர்கள்; செய்வதறியாது திணறும் ஆசிரியர்கள்

பொள்ளாச்சி : அரசு பள்ளிகளில், விதிமுறைகளை மீறும் மாணவர்களை கண்டிக்கும்போது, பெற்றோர்களின் ஒத்துழைப்பு கிடைப்பதில்லை என, ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், அரசு உயர்நிலை, மேல்நிலை மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், நகராட்சி மற்றும் ஆதிதிராவிடர் பள்ளிகள் என மொத்தம், 87 பள்ளிகள் உள்ளன. அதில், ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வகுப்பு வரை, 29,143 மாணவர்கள் படிக்கின்றனர்.இம்மாணவர்கள், பள்ளிக்கு வரும் போது, விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்படுகிறது. ஆனால், பெற்றோர்களின் ஒத்துழைப்பு இல்லாததால் அவர்களை நல்வழிப்படுத்த முடியாமல் ஆசிரியர்கள் திணறி வருகின்றனர்.பள்ளி தலைமையாசிரியர்கள் கூறியதாவது: மாணவர்கள் அனைவரும், காலை, 9:15 மணிக்குள் பள்ளிக்கு வர வேண்டும். 'லோ ஹிப்', 'டைட் பிட்' பேன்ட்கள் அணிந்து வரக்கூடாது. அரைக்கை சட்டை மட்டுமே அணிய வேண்டும். சட்டையை இறுக்கமாக அணியக்கூடாது.மாணவர்கள் அணியும் சட்டை நீளம் 'டக் இன்' செய்யும்போது வெளியில் வராத வகையில் இருக்க வேண்டும். சீரற்ற முறையில் 'இன்' பண்ணக்கூடாது. கை, கால் நகங்கள், தலை முடி சரியான முறையில் வெட்டப்பட வேண்டும்.மேல் உதட்டை தாண்டாதவாறு மீசை, கைகளில் ரப்பர் பேண்டு, கயிறு, கம்மல், கடுக்கன், செயின் போன்றவற்றை அணிந்து வரக்கூடாது என தெரிவிக்கப்படுகிறது. ஆனால், மாணவர்கள் சிலர், இத்தகைய விதிகளை கடைபிடிப்பதில்லை.வகுப்பு ஆசிரியர்கள் கண்டிக்க முற்பட்டாலும், கீழ் படிவதில்லை. பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களில் பலரும், நீளமாக தாடி மற்றும் தலை முடி வளர்த்தியும், முறையாக சீருடை அணியாமலும் அவ்வபோது அடாவடிகளில் ஈடுபடுகின்றனர்.பெற்றோர்களை அழைத்து தகவல் தெரிவித்தாலும் அவர்களும் கண்டு கொள்வதில்லை. இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் மாணவர்களை திருத்த, கடும் நடவடிக்கை தேவைப்படுகிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.பெற்றோர்களும் இது தொடர்பாக ஆசிரியர்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். தமிழக அரசும் இதுகுறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

ஆரூர் ரங்
ஜூன் 28, 2024 10:49

குடித்துவிட்டு பள்ளிக்கு வரும் மாணவர்களை பற்றி அரசுக்குக் கவலையில்லை. (டாஸ்மாக் வரும்படி) ஆனால் விபூதி குங்குமம் திலகம் வைத்துக் கொண்டு வந்தால் தவறு.


konanki
ஜூன் 27, 2024 23:44

இந்த மாணவர்கள் எதிர் காலத்தை பற்றி கவலையே படாதீங்க. இந்த மாணவர்கள் தான் இன்னும் சில வருடங்களில் திமுக கூட்டணியில் கவுன்சிலிர்/எம் எல் ஏ/எம் பி/மாவட்ட செயலாளர்/ அமைப்பு செயலாளர்/ அமைச்சர் / வாரிய தலைவர்கள் என்று எல்லா பதவிகளிலும் சக்கை போடு போடுவார்கள்.


Ramesh
ஜூன் 27, 2024 22:27

அரசு பள்ளி மாணவர்கள் பாசமாக போவதை விரும்பி ஏற்றுக்கொண்டு தான் மாணவர்களின் பெற்றோர்கள் அங்கு அனுப்புகின்றனர். உண்மையிலேயே அக்கறை இருந்தால் தங்கள் குழந்தைகள் தவறு செய்யும் போது ஆசிரியர்களிடம் அவர்களே நாலு சாத்து சாத்த சொல்வார்கள்.


D.Ambujavalli
ஜூன் 27, 2024 16:23

பெற்றோர்களில் எத்தனைபேர் உள்ளூர் அரசியல் பிரமுகருடன் தொடர்பு உள்ளவர்களோ ? இன்னும் சிலர் ரவுடிகளாகக்கூட இருக்கலாம் உயிரும், குடும்பமும் முக்கியம் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் வேலை என்பது இப்போது கத்திமேல் நடப்பது போல் ஆகிவிட்டது


Tamilselvi
ஜூன் 27, 2024 15:15

இந்த ஒரு காரணம்தான் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்ப்பது, தனியார் பள்ளிகளில் இதுபோன்ற சம்பவங்கள் அரிதாக நடக்கும் ஆனால் பெற்றோர்கள் பணம் கட்டுவதால் ஒத்துழைப்பு தருவார்கள். எல்லாவற்றையும் ஓசியில் அனுபவிக்கும் இந்த மாணவர்களுக்கு பொறுப்பு தெரிவதில்லை, குறைந்த சதவீதம் மாணவர்கள் ஒழுங்கு முறையுடன் இருக்கிறார்கள், ஆனால் பெரும்பாலான மாணவர்கள் பீர், பிராந்தி , போதை வஸ்து சாப்பிடுவது, பாலியல் நடத்தையில் ஈடுபடுவது என இல்லாத அழிச்சாட்டியம் செய்கிறார்கள். இவர்களை திருத்த எந்த வழியும் பயனற்றதே, இன்டெர்னல் மார்க் வைத்தாலும் அவர்களை திருத்த முடியாது ஏனெனில் பள்ளியில் தேர்ச்சி சதவீதம் குறைந்தால் மேலதிகாரிகளுக்கு பதில் சொல்ல வேண்டும் என்பதற்காக ஆசிரியர்கள் முழு மதிப்பெண் போட்டு விடுவார்கள். பெற்றோர்களுக்கும் கூட அவர்கள் கட்டுப்படுவது இல்லை, மோபைல் போன், டாஸ்மாக், போதை வஸ்து இவைதான் அவர்களை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. உலகம் அழிவை நோக்கி போகிறது. இதுல இவங்களுக்கு இட ஒதுக்கீடுகள் ஒரு கேடு. கல்லூரியில் அரசு பள்ளிகளில் படித்தவர்களுக்கு 7.5% , இதையெல்லாம் மாற்றணும், இலவசம் என்பதை மாற்றணும். அல்லது வேறு வகையில் அவர்களின் தரத்தை மேம்படுத்த மாரல் வகுப்புகள் இருக்கணும். நீதி நெறி, நல்லொழுக்கம் பாடம் பள்ளியில் வைக்க வேண்டும்.


Naveen
ஜூன் 28, 2024 06:53

நீங்க சொல்லுறது எல்லாம் சரிதான் அரசு பள்ளி மாணவர்கள் மட்டும் அப்படி செய்வது இல்லையே... முடிந்த ஆண்டு தேர்வுகளில் தேர்ச்சி மதி்பெண் அதிகம் குடுத்தது அவர்கள் தான். முடிந்தால் அவர்களை வழி நடத்தும் ஆசிரியர்களை அவர்களின் இளமை வேகத்தில் பயணிக்க செய்யவும்.....


s chandrasekar
ஜூன் 27, 2024 14:51

Good news. So long as privileges are given on the basis of e,creed and religion this will happen. If a particular community student is asked to obey the rules his whole community leaders will come to question the teachers and police. This type of misbehaviour will become servere in the coming years. Merit alone should prevail for education and employment.


Mariraj R
ஜூன் 27, 2024 14:29

மாணாக்கர்கள் கல்வி பயில மட்டும் பாடசாலை இல்லை, நல்ல ஒழுக்கம், நல்வழிப்படுத்துதலும் பள்ளியின் ஆசிரியர்கள் கடமை.


Rojan
ஜூன் 27, 2024 14:06

திராவிட மாடல் ஆட்சியில் பெற்றோர்கள் அப்படிதான் இருப்பார்கள் ... அதிமுக ஆட்சியில் திமுகவிற்காக போராட்டம் நடத்தி மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாண்ட ஆசிரியர் சங்கங்கள் இப்போ மாணவர் நலன் பற்றி அக்கறை காட்டுகிறார்களா ... வேடிக்கையா இருக்கு


raja
ஜூன் 27, 2024 06:53

இது எதுக்கு வேண்டாத வேலை.. இந்த காலத்தில் வந்தோமா ஆசிரியர் வேலையை மட்டும் பார்தோமா..சம்பளம் வாங்கினநோமா என்று போய் கொண்டு இருக்க வேண்டும். இதில் அடுத்தவனை கண்டிக்க நீ யார் என்று பெற்றோர்களும் நீதி கணவாங்களும் கேட்கிறார்கள்.. இல்லை என்றால் ஆசிரியர் மாணவர்களிடம் தவறாக நடந்தார் என்று போக்சோவில் கைதாக கூடும்...


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ