உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / கணவருக்கு சரமாரி கத்திக்குத்து; சாட்டிங் மோக மனைவி கைது

கணவருக்கு சரமாரி கத்திக்குத்து; சாட்டிங் மோக மனைவி கைது

பெங்களூரு : 'மொபைல் போனில் மூழ்கியிருக்க வேண்டாம்' என கண்டித்த கணவரை, கத்தியால் குத்திய மனைவி கைது செய்யப்பட்டார்.கர்நாடக மாநிலம், விஜயபுரா நகரின் ஆலகுன்டே நகரில் வசிப்பவர் அஜித் ரத்தோட், 30; தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவரது மனைவி தேஜு, 27. இவர், மொபைல் போனுக்கு அடிமையானவர். வீட்டை கவனிக்காமல், எந்த நேரமும் 'சாட்டிங்' செய்து பொழுது போக்குவார். கணவர் பல முறை அறிவுரை கூறியும் பலன் இல்லை. தினமும் சாட்டிங்கில் இருந்ததால், மனைவிக்கு வேறு யாருடனோ கள்ளத்தொடர்பு இருக்கலாம் என அஜித் சந்தேகம் அடைந்தார்.இது குறித்து கேட்டால், தேஜு பதில் அளிக்காமல் சண்டை போட்டுள்ளார். இதனால் கணவரின் சந்தேகம் அதிகமானது. நேற்று முன்தினம் நள்ளிரவும் தேஜு மொபைல் போனில் சாட்டிங் செய்து கொண்டிருந்தார். கோபம் அடைந்த அஜித், 'யாருடன் சாட்டிங் செய்கிறாய்; பதில் சொல்' என விசாரித்தார்.ஆனால், தேஜு பதில் அளிக்கவில்லை. நீண்ட நேரம் இருவருக்கும் வாக்குவாதம் நடந்தது. அதன்பின் அஜித் உறக்கத்தில் ஆழ்ந்தார். அவரது மனைவியின் கோபம் குறையவில்லை. அதிகாலை 3:00 மணியளவில், காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து வந்து, கணவர் அஜித்தின் கழுத்திலும், வயிற்றிலும் சரமாரியாக குத்தினார்.அலறல் சத்தம் கேட்டு, குடும்பத்தினர் உள்ளே வந்து பார்த்தனர். ரத்தக் காயங்களுடன் கிடந்த அஜித்தை மீட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆதர்ஷா நகர் போலீஸ் நிலையத்தில் குடும்பத்தினர் புகார் அளித்தனர். தேஜுவை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

m.arunachalam
ஏப் 28, 2025 15:08

பழுக்க காய்ச்சிய இரும்பு கொண்டு நடவடிக்கை எடுத்தால் நல்ல தீர்வாகும் பண்பாடு , கலாச்சாரம், பொறுமை மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவற்றை பெண்கள் பறக்கவிட்டு வெகு நாட்கள் ஆகிவிட்டது .


Ramesh Sargam
ஏப் 28, 2025 12:29

இது பல வீடுகளில் நடக்கிறது. ஒரு சில வீடுகளில் பெண்கள், ஒரு சில வீடுகளில் ஆண்கள், பல வீடுகளில் மொத்தக்குடும்பமே சாட்டிங் மோகத்தில் வாழ்க்கையை தொலைக்கின்றனர். மொபைல் போன் கண்டுபிடித்தவன் இன்று உயிருடன் இருந்தால் தன்னை நொந்துகொள்வான், ஏண்டா கண்டுபிடித்தோம் என்று.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை