உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / தரம் தாழ்ந்து தான் இருக்கிறது!

தரம் தாழ்ந்து தான் இருக்கிறது!

என்.வைகைவளவன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ-மெயில்' கடிதம்: 'தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படித்தவர்கள், உலகின் தலைசிறந்த டாக்டர்களாக உள்ளனர். இதைப் பிடிக்காத சிலர், வயிற்றெரிச்சல் காரணமாக தமிழகத்தின் பாடத் திட்டத்தை குறை கூறுகின்றனர்' என்கிறார் உதயநிதி ஸ்டாலின்.'மயில்சாமி அண்ணாதுரை, வீர முத்துவேல் ஆகியோர் அரசு பள்ளிகளில் படித்து இஸ்ரோ விஞ்ஞானிகளாகி உள்ளனர்' என்று சொல்லி அரசு பள்ளிகளைப் புகழ்ந்து தள்ளி இருக்கிறார் உதயநிதி.தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்த போது அரசு பள்ளிகள் அனைத்தும், தரத்தில் உயர்ந்திருந்தன என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் இப்போது, அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வித் தரம் குறைந்து போய்விட்டது தான் நிதர்சனமான உண்மை.ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., போன்ற தேர்வுகளில் அரசு பள்ளிகளில் படித்து தேர்ச்சி பெறுவோர் மிகக் குறைவு தானே? அரசியல்வாதிகளின் பிள்ளைகள், அதிகாரிகளின் பிள்ளைகள் எல்லாம், தனியார் பள்ளிகளில்தானே படிக்கின்றனர்!கூலி வேலை பார்ப்பவர்களின் குழந்தைகள் தான், வேறு வழியின்றி அரசு பள்ளிகளில் படிக்கின்றனர்.தனியார் பள்ளிகளில் இருக்கும் சுகாதார வசதிகள், அரசு பள்ளிகளில் இருப்பதில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.இந்தக் காலத்தில் அரசு பள்ளிகளில் படித்து வெளியே வருபவர்கள், டாக்டர்களாக, பொறியாளர்களாக, விஞ்ஞானிகளாக இருப்பது அபூர்வம். மறைந்த தலைவர்களான அண்ணாதுரை, அன்பழகன், நெடுஞ்செழியன் போன்றவர்கள், அரசு பள்ளிகளில் - கல்லுாரியில் படித்து பட்டம் பெற்றனரா என்பதை, உதயநிதி தான் மக்களுக்கு விளக்க வேண்டும்.தமிழக கவர்னர் சொல்வது போல, 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், மூன்றாம் வகுப்பு பாடப் புத்தகத்தைப் படிக்க முடியாமல் தடுமாறுகின்றனர் என்பதுதான் உண்மை.சாதாரண கூட்டல் கழித்தல் போன்ற கணக்குகளைக் கூட, கால்குலேட்டர் உதவியுடன் தான் இந்தக் காலத்து மாணவர்கள் செய்கின்றனர்.அந்த அளவுக்கு, தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களின் கல்வித் தரம் தாழ்ந்து போயிருக்கிறது.

'தினமலர்' ஓர் இயக்கம்!

ஆர்.ஹரிகோபி, புதுடில்லியிலிருந்து அனுப்பிய, 'இ-மெயில்' கடிதம்: 'நான் ஏன் தினமலர் படிக்கிறேன்' என்ற 50 ஆண்டு கால வாசகர், மதுரை வி.குமாரின் கட்டுரை, 'தினமலர்' பிறந்த நாளான செப்டம்பர் 6 அன்று படித்து உவந்தேன். அது எங்களைப் போன்ற, ஒவ்வொரு தினமலர் வாசகர்களின் மன பிரதிபலிப்பு.மக்களின் நாடித் துடிப்பை அறிந்து, செய்திகளை உடனுக்குடன் தருவதும், இணைப்பிதழ்கள் மூலம் அனைத்து தரப்பு வாசகர்களையும் தன் வசப்படுத்தி, அரவணைத்து, ஆதரித்து, ஊக்குவித்து அவர்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பதாலும், தினமலர் நாளிதழ் வாசகர்களின் மனதில் ஒரு நாளிதழாக இல்லாமல், ஒரு இயக்கமாகவே பதிந்துள்ளது.குறிப்பாக ஞாயிறு இணைப்பு வாரமலருக்கு வாசகர்கள் ஏராளம். தினமலர், முகவர்கள், விளம்பரதாரர்கள், படைப்பாளர்கள், வாசகர்கள் என எல்லாரையும் குடும்ப உறுப்பினராக பாவிப்பதால் தான், இந்த இமாலய சாதனை சாத்தியமாகி உள்ளது.எனக்கு நினைவு தெரிந்த நாள்முதல், இன்றைக்கு இந்த நேரம் வரை, கிட்டத்தட்ட 58 ஆண்டுகளாக, தினமலர் நாளிதழ் வாசிப்பதை, விளம்பரங்களைக் கூட விட்டு வைப்பதில்லை, ஒரு வழக்கமாகக் கொண்டுள்ளேன்.தினமலர் மேலும் பல்லாண்டுகள் பத்திரிகை உலகில் செழித்தோங்க வாழ்த்துகள்!

உங்கள் பெயரை போடுவது அறிவியல் அறிவா?

பி.ராஜேந்திரன், சென்னையில் இருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: தமிழக பள்ளிகளில் ஆன்மிக நிகழ்ச்சிகளுக்கு அரசு தடை விதித்திருப்பதும், சென்னையில் இரண்டு தலைமை ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதும் கடும் அதிர்ச்சி அளிக்கிறது. 'பரம்பொருள் அறக்கட்டளை' என்ற அமைப்பைச் சேர்ந்த மகாவிஷ்ணு, தன் உரையின் நடுவில் வந்த இந்த இடையூறு, யாரிடமிருந்து என்பதை உணராமல், குதர்க்கமாக பேசியது குற்றம் என்றாலும், 'இனிமேல் பள்ளிகளில் ஆன்மிக சொற்பொழிவுகள் இருக்கக் கூடாது' என்று சொல்வதற்கு, அந்த இறைவன் என்ன தவறு செய்தார்?ஒரு நாள் சமையல் சரியாக செய்யப்படவில்லை என்பதால், நாம் சாப்பிடாமலே இருந்து விடுவோமா?பெரும்பாலான கிறிஸ்தவ அமைப்புகள் நடத்தும் பள்ளிகளில், காலையில் யாரோ ஒரு ஆசிரியரோ அல்லது தலைமை ஆசிரியரோ ஒரு ஆன்மிக உரையை நடத்தி விட்டு, பைபிளிலிருந்து வாசகங்கள் சொல்வது, இன்றும் நடைபெற்று வருகிறது. நம் ஆளுங்கட்சி அரசியல்வாதிகள் அவற்றை கண்டுகொள்ளாமல், ஹிந்து பள்ளிகளில் நடத்தப்படும், இது போன்ற ஆன்மிக உரைகளின் மீது வெறுப்பு காட்டுவது ஏன்? தமிழக முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய மகனின் அந்தரங்க நண்பனான பள்ளிக் கல்வி அமைச்சர் மகேஷ் என்பதால், 'அறிவியல் வழியே முன்னேற்றத்திற்கான வழி, அதனால், இனிமேல் இறைவனுக்கு மதிப்பு கொடுக்காதீர்கள்' என்பது போல வெளிநாட்டிலிருந்து ஒரு அறிக்கை கொடுக்கிறார். எவ்வளவோ குற்றவாளிகளை தப்ப விட்டு வேடிக்கை பார்த்த இந்த அரசு, மகாவிஷ்ணுவை மட்டும், ஆஸ்திரேலியாவிலிருந்து வந்ததும் கைது செய்து, மாபெரும் குற்றவாளி என்பது போல விசாரணை செய்துள்ளது. மாணவர்களை, 'படிப்பில் கவனம் அவசியமில்லை; போராட்டம் தான் நம் வழி' என்று கூறும் இந்திய மாணவர் சங்கத்தினரும், நம் அரசியல்வாதிகளால் துாண்டப்பட்டு ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். இது மட்டுமே இல்லாமல், 'எங்கள் குலதெய்வத்திற்கு நடக்கும் குடமுழுக்கு நீராட்டு விழாவிற்கான அழைப்பிதழில் கூட, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் நல்வழி காட்டுதலின் படி' என்று முதலில் போட்டு, பின், 30 கழக உடன்பிறப்புகளின் பெயரை போட்டுக் கொள்ளும் போது, இந்த அறிவியல் அறிவு எங்கே போனது? தன் மனைவி துர்கா ஸ்டாலின் எத்தனை ஹிந்து மதக் கோவில்களுக்கு சென்று வழிபட்டாலும், தன் கட்சிக் கொள்கையை மறந்து விடும் ஸ்டாலின் அவர்களின் அரசு, 'கடவுளே இல்லை, ஹிந்து மதத்தை எதிர்ப்பது தான் எங்கள் கொள்கை' என்று செயல்பட்டாலும், அதை எந்த மதமும் ஏற்றுக் கொள்ளாது என்பதே உண்மை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Subramanian N
செப் 09, 2024 23:07

உதயநிதி படித்த பள்ளிக்கூடம் " Don Bosco" ஆங்கில பள்ளி , கனிமொழி படித்த பள்ளிக்கூடம் " Church Park" ஆங்கில பள்ளி. ஏன் அவர்கள் அரசு பள்ளியில் படிக்கவில்லை. ஊருக்கு ஒபதேசமா.


T.sthivinayagam
செப் 09, 2024 22:00

பாஜக மாநில தலைவர் தமிழக அரசு பாடதிட்டத்தில் படித்து தான் ஐஏஸ் ஆனார் தரம் இல்லை என்றால் தமிழக பாஜக தலமை தரமற்ற படிப்பு என்று கூறுரவராங்களா


rameshkumar natarajan
செப் 09, 2024 13:57

Standard of government school was good and now it has come down is a hypocritic statement. This kind of comments are made with ulterior motive. What these people are trying to preach is the teachers are not up to the standard? The teachers had studied as same as a private school teacher, so dont make ststements without any data. in IAS/IPS, how people from Bihar/UP are comming in larger numbers, in those states education is better than Tamil nadu?


Sathyapriyan R
செப் 09, 2024 12:26

தமிழக அரசு பள்ளிகளின் கல்வித் தரம் குறித்து தமிழக ஆளுநர் கூறியது முற்றிலும் உண்மை.


Dharmavaan
செப் 09, 2024 12:13

இந்த இரட்டை வேடம் சுடாலின் குடும்பத்துக்கு உதவும் கடவுள்தான் குற்றவாளி


rasaa
செப் 09, 2024 10:10

இட ஒதுக்கீடு தவறில்லை. ஆனால் அதே காரணம் கொண்டு தகுதியற்ற , தரமற்றவர்களை ஆசிரியர் பணியில் அமர்த்துவது எந்த வகையிலும் பயன் தராது.


Barakat Ali
செப் 09, 2024 09:15

திருத்திக்கொள்ள ஒரு வாய்ப்பாகப் பார்க்காமல் குறை சொல்பவர்களை எதிரிகளாகப் பார்ப்பது திராவிடமாடல் .....


Barakat Ali
செப் 09, 2024 09:01

மீடியாவை சந்திக்க நரேந்திர மோடிக்கு தைரியம் இல்ல ன்னு சொல்லுவோம் .... ஆனா எங்க சின்னதத்திய இப்படிக்கேட்க எந்த நிருபருக்கும் துணிவில்லை ..... "தமிழ்ப்பாடத்திலேயே மாணவர்கள் பெயில் ஆகின்றனர் .... ஐந்தாம் வகுப்பு கணிதத்தை எட்டாம் வகுப்பு மாணவனால் உதாரணத்தைப் பார்த்தும் தீர்க்க இயலவில்லை ..... அது ஏன் ????"


rasaa
செப் 09, 2024 10:11

இவர் தந்தையே தமிழ் பாடத்தில் பெயிலானவர்தான்.


rameshkumar natarajan
செப் 09, 2024 13:48

In UP Lakhs of students failed in Hindhi, why? you answer that, i will answer your question.


Barakat Ali
செப் 09, 2024 21:20

rameshkumar natarajan, Understood you seems poor IQ. The context here is only Tamilnadu but not UP. Please do not divert the core issue as being done by your DMK masters - since you are supporting them as if you are a slave. Please go through the following accusations. அரசுப் பள்ளிகளில் ஆசிரியப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ள நிலையில், அங்கு படிக்கும் ஏழை எளிய மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. தமிழக பள்ளிக் கல்வித்துறையின் தரவுகளின்படி, ?? மாவட்டங்களில் சென்னை உட்பட ?? மாவட் டங்களில் மட்டுமே, இடைநிலை ஆசிரியர்களின் பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்பட்டு, மீதமுள்ள ?? மாவட்டங்களில், அதிக பணியிடங்கள் காலியாக உள்ளன என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி யுள்ளது. ஆட்சிக்கு வருவதற்கு முன், பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கப்படும் என்ற பொய் வாக்குறுதியை வழங்கி , இன்று அரசுப்பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையைத் தீர்க்கமுடியாமல் திண்டாடுகிறது என்பதுதான் நிதர்சனம். ஆசிரியர் பற்றாக்குறையால் , ஒற்றை ஆசிரியரைக் கொண்டு மொத்த அரசுப்பள்ளியும் இயங்கும் அவலமும், பள்ளி மாணவர்களே ஆசிரியர்களாக மாறி பாடம் நடத்தும் பரிதாபமும் தொடர்கதையாக இருக்கையில், பள்ளிக்கல்வித் துறையின் அமைச்சர் என்னதான் செய்து கொண்டிருக்கிறார் ? “பள்ளிக் கல்வித்துறையையே தலைகீழாக மாற்றப்போகிறேன்” என்று வாய்ச் சவடால் விட்ட அவர், சின்னவரின் ரசிகர் மன்ற பொறுப்புகளைக் கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்வதற்காகவா அமைச்சர் பதவிக்கு வந்தார்? வகுப்பறையில் இடிந்து விழும் மேற்கூரைகள் ஒருபுறம், ஆசிரியரில்லாத வகுப்பறைகள் மறுபுறமென, பள்ளிக்கல்வித் துறையை அதல பாதாளத்திற்கு இழுத்துச் செல்வதற்காகத்தான் பதவிப்பிரமாணம் எடுத்தாரா அன்பில் மகேஷ் ? உங்களின் நிர்வாகத் திறனின்மைக்கு, தமிழகத்தின் ஏழை எளிய மாணவர்களின் எதிர்காலம் பலியாக வேண்டுமா? கடும் கண்டனங்கள்


ramani
செப் 09, 2024 06:50

ஆளுநர் சட்ட சொல்வது முற்றிலும் உண்மையே


நிக்கோல்தாம்சன்
செப் 09, 2024 06:28

தமிழக பள்ளி மாணவர்கள் தமிழக அரசின் டாஸ்மாக் பணத்தை அருந்தும் போட்டோக்களை பார்த்து என்னை போன்றோரே அதிர்ச்சியடைகிறேரோம் ஆனால் கல்வி அமைச்சர் அன்பில் பொய்மொழி அதுகுறித்து எந்த ஒரு அறிக்கையோ நடவடிக்கையோ எடுக்காமல் மகாவிஷ்ணு பேச்சு ஒரு சாதாரண விஷயத்தை கண்டு கொந்தளிப்பது போன்ற தடித்த வார்த்தைகளை பயன்படுத்தி இருப்பது கண்டு மிகுந்த வேதனை அடைந்துள்ளேன் , கல்வி அமைச்சர் எனது ஏரியா என்று கூறிய பள்ளியில் மது அருந்தும் கொடுமை அவனுக்கு இன்னமும் சாதாரண நிகழ்வா? அவனுக்கு வோட்டளித்தவர்கள் தான் யோசிக்க வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை