உள்ளூர் செய்திகள்

முதல்வரா, கொக்கா?

ஆர்.எஸ்.மணி, ஈரோடிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: செயற்கரிய சாதனைகளை செய்தவர்கள், அதை வெளிக்காட்டிக் கொள்ளா மல் அமைதியாகத் தான் இருப்பது வழக்கம்.அந்த வழக்கத்தை நம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் கடைப்பிடித்து இருக்கிறார் என்றால், மிகையில்லை.நாமக்கல் மாவட்டத்தில், 16,031 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், 'அனைத்து துறைகளிலும் தமிழகத்தை முதல் மாநிலமாக உயர்த்துவோம்' என சூளுரைத்திருக்கிறார்.ஏற்கனவே தமிழகம் அனைத்து துறைகளிலும் முதல் மாநிலமாகத்தான் கோலோச்சிக் கொண்டிருக்கிறது.* டாஸ்மாக் வியாபாரத்தில் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதல் மாநிலமாக கோலோச்சிக் கொண்டிருக்கிறது*இந்தியாவிலேயே, டாஸ்மாக் கடைகள் அதிக எண்ணிக்கையில் உள்ள முதல் மாநிலமாகத்தான் தமிழகம் திகழ்ந்து கொண்டிருக்கிறது. தீபாவளி விற்பனைக்காக, 3,500 புதிய கவுன்டர்கள் திறக்கவும் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. வேறு எந்த மாநிலமாவது, 'குடிமகன்'கள் மீது இவ்வளவு கரிசனம் கொண்டிருக்கிறதா?* தமிழக மக்களில் சற்றேறக்குறைய 80 சதவீத மக்கள், 'குடி'மகன்களாக தான் உள்ளனர். மீதியுள்ள 20 சதவீதம் மக்களையும் ஆட்சி காலம் முடிவதற்குள், 'குடிநோயாளி'ளாக ஆக்கும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது* குடும்பப் பெண்கள், கல்லுாரி மாணவ - -மாணவியர், இளம் பெண்கள், பள்ளி மாணவ - -மாணவியர் அனைவருக்கும் பிரதி மாதமும் உதவித் தொகை என்ற பெயரில் ஒரு தொகையை கொடுத்து பிச்சைக்காரர்களாக மாற்றி வைத்திருக்கிறது. இந்தியா வில் வேறு எந்த மாநிலமாவது இந்த சாதனையை செய்ய முன் வந்ததுண்டா? * மாணவ- - மாணவியர் மட்டுமல்லாது, பச்சிளம் பாலகர்களையும் காலை உணவுக்கு அரசிடம் தட்டேந்தி நிற்கும் நிலையை உருவாக்கி வைத்திருக்கிறது பாருங்கள். வேறு எந்த மாநிலத்திலாவது இந்த சாதனை உண்டா?* வீட்டுவரி, சொத்துவரி, பத்திரப்பதிவு வரி, மின் கட்டணம், குடிநீர் கட்டணம் போன்ற அனைத்து வரிகளையும் உயர்த்தியுள்ளதில், தமிழகம் முதல் மாநிலமாகத் தானே திகழ்ந்து கொண்டிருக்கிறது* கடந்த மூன்றாண்டு காலத்தில், எத்தனை எத்தனை ஹிந்து கோவில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டிருக்கின்றன... வேறு எந்த மாநிலமாவது திராவிட மாடல் கழக அரசின் இந்த சாதனைக்கு பக்கத்தில் நிற்க முடியுமா?'சொன்னதைச் செய்வோம்; சொல்லாததை யும் செய்வோம்!' என்பது கழகத்தின் கொள்கை முழக்கங்களில் முதன்மையானது. அந்த கொள்கையின்படி, தேர்தல் வாக்குறுதியில் சொல்லாத பல விஷயங்களை, சந்தடியில்லாமல் செய்து எவ்வளவு அடக்கமாக, 'அனைத்து துறைகளிலும் தமிழகத்தை முதல் மாநிலமாக உயர்த்துவோம்' என்று அறிவிக்கிறார் பாருங்கள்.அந்த தன்னடக்கம், வேறு எந்த மாநில முதல்வருக்கு வரும்!

அதிகாரிகளை குறைசொல்லி பலனில்லை!

ராம்கோ. பாண்டியன், செங்கல்பட்டிலிருந்து அனுப்பிய, 'இ-மெயில்' கடிதம்: இதே பகுதியில், 'முடியுமா முதல்வரால்? சந்தேகம் தான்!' என்ற தலைப்பில் மதுரையிலிருந்து பாலமுருகன் என்ற வாசகர் கடிதம் எழுதி இருந்தார். 'தமிழக அரசு அலுவலகங்களில் லஞ்சம் இல்லா மல் எந்த வேலையும் நடக்காது' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.தமிழகம் என்றைக்கு திராவிட கட்சிகளின் பிடியில் சிக்கிக் கொண்டதோ, அன்றிலிருந்து தமிழகத்தில் ஊழலும், லஞ்சமும் வேர் விட துவங்கி, ஆலமரமாக வளர்ந்து வருகிறது.பூச்சி மருந்து தெளிப்பு ஊழல், சர்க்கரை பேர ஊழல், எரிசாராய ஊழல், சர்க்காரியா கமிஷன், வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு என, பல விசித்திரமான வழக்குகளை சந்தித்தது இந்த தமிழகம்.ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி, ஆண்ட கட்சியாக இருந்தாலும் சரி, ஊழல் வழக்குகளில் அமைச்சர்கள் பலர் சிக்கி, நீதிமன்றங்களின் கருணையால் நல்லவர்கள் போல வெளியில் உலாவிக் கொண்டுஇருக்கின்றனர்.ஊழல் செய்து சிக்கிய அமைச்சர் வெளியில் வரும்போது, அவரை தேசத்தின் தியாகி போல சித்தரித்து வரவேற்பு கொடுக்கும் நிலை இருக்கும்போது, நாட்டில் ஊழல் எப்படி குறையும்?ஆண்டொன்றுக்கு 1,000 கோடி, 2,000 கோடி எனும் சுருட்டும் அமைச்சர்களை பார்க்கும்போது, 'அவர்கள் தான் அப்படி சுருட்டுகின்றனரே... நாமும் கொஞ்சம் சுருட்டி கொள்ளலாம்' என்று யோசித்து, அதிகாரிகளும் ஊழல்வாதிகளாய் மாறி விடுகின்றனர். 'அமைச்சர்கள் செய்யும் ஊழல்களை வேடிக்கை பார்க்கவா நாம் பதவியில் இருக்கிறோம்... நாமும் முடிந்த அளவுக்கு மூட்டை கட்டிக் கொள்ளலாம்' என்ற நினைப்புதான் மேலோங்கி நிற்கும்.அமைச்சர்கள் நேர்மையானவர்களாக இருந்தால் தான், அவர்களுக்கு கீழ் பணிபுரியும் உயர் அதிகாரிகளும் நேர்மையாக பணியாற்றுவர்; அவர்களைப் பார்த்து இடைநிலை அதிகாரிகளும், கடைநிலை ஊழியர்களும் நேர்மையாக பணியாற்ற வேண்டும் என்ற உணர்வுடன் இருப்பர். இதில், அரசு அலுவலர்களை மட்டும் குறை சொல்லி பயனில்லை.

தமிழிசை மேடம்... நீங்களும் வாரிசு தானே!

சி.கார்த்திகேயன், சாத்துார், விருதுநகர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில் வாரிசு அரசியல் என்ற பேச்சு, நாலாபுறமும் தெறிக்கிறது. பா.ஜ., கட்சி, இதை வைத்தே தி.மு.க.,வை, 'டின்' கட்டுகிறது. பார்க்கப் போனால் அது, ஓரளவு உண்மை தான் என்றாலும்கூட, பா.ஜ.,வில் வாரிசு அரசியல் இல்லை என்றால், தமிழகத்தில் அது தவறு.சமீபத்தில், துணை முதல்வர் உதயநிதியைப் பற்றி, பா.ஜ., தமிழிசை பேசியபோது, 'அவருடைய தாத்தா மற்றும் தந்தை போல, தான் வாரிசு அரசியல் செய்யவில்லை' என்று கூறினார். இவருடைய தந்தை, சித்தப்பா, தற்போது உள்ள கன்னியாகுமரி எம்.பி., என, நம் கண் முன் தெரிந்த அனைவரும், இவருடைய சொந்தங்கள் தானே! பா.ஜ.,வில் சேரும் வரை, வேறு கட்சியில் இருந்த இவரை, குமரி அனந்தன் மகள் என்று தானே நாம் அடையாளம் சொல்வோம்?கருணாநிதி பரம்பரையில், ஏறக்குறைய அனைவருமே, மக்களை நேரடியாக களத்தில் சந்தித்து, மக்கள் ஓட்டளித்து தான் பதவியில் அமர்கின்றனர் என்பது தமிழிசைக்கு தெரியாதா என்ன!ஆனால், தமிழிசை நிலை அப்படி கிடையாது. பா.ஜ., தமிழக தலைவராக மாறிய பின்தான், இவரை பலரும் அடையாளம் கண்டனர். தமிழகத்தில் கோலோச்ச வேண்டும் என்ற தீராத ஆசையில், துாத்துக்குடி மக்கள் மண் அள்ளிப் போடுகின்றனர். அந்த விரக்தியில், வாரிசு அரசியலை பற்றி பேச வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு விட்டார். யோசித்து பேசுங்க தமிழிசை மேடம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Barakat Ali
அக் 25, 2024 11:24

ஆர் எஸ் மணி திராவிடம் என்னும் முகமூடியைக் கிழித்தெறிந்து விட்டார் ..... பம்மாத்துக்காரர்களை அம்பலப்படுத்திய அவருக்குப் பாராட்டுக்கள் ......


kantharvan
அக் 25, 2024 12:08

ஆர் எஸ் எஸ் மணிக்கு சொம்பு தூக்கி அசிங்கப்பட வேண்டாமே அமைதி விரும்பி. இங்கே செமையா அடி வாங்கிகிட்டு இருகாங்க அல்லக்கைகள்.


Barakat Ali
அக் 25, 2024 11:21

சாத்தூர் கார்த்திகேயன் அவர்களே.. பாஜக உட்பட வாரிசு அரசியல் செய்யாத அரசியல் கட்சி என்று நம் நாட்டில் எதுவும் இல்லை... ஆனால் திமுக செய்வது குடும்ப அரசியல் ...... அதிகாரத்தைப் பயன்படுத்தி குடும்பத்தின் பல உறுப்பினர்கள் வெவ்வேறு துறைகளிலும் இறங்கி பிசினஸ் செய்து ஆக்டோபஸ் கரங்களால் வளைத்துப் போடுவதை, அதற்கு அதிகாரம் மிக்க பதவிகளை பயன்படுத்துவதை என்னவென்று சொல்வது? இப்படி இந்தியாவில் வேறொரு குடும்பம் அதிகாரத்தில் இருக்கிறதா? இருந்தால் சொல்லுங்கள்.. நானும் தெரிந்து கொள்கிறேன்.....


Barakat Ali
அக் 25, 2024 11:03

நயவஞ்சகர்கள் அதாவது முனாஃபிக்குகள் குறித்து இஸ்லாம் ...... தங்களுடைய பொய்ச் சத்தியங்களைக் கேடயமாக வைத்துக் கொண்டு அல்லாஹ்வின் பாதையிலிருந்து மக்களைத் தடுத்து வருகின்றனர் ..... நிச்சயமாக இவர்கள் செய்து கொண்டிருப்பது மிகவும் கெட்டது ......


kantharvan
அக் 25, 2024 12:09

முல்லா சொல்லவந்துட்டான் ??


Sathyanarayanan Sathyasekaren
அக் 25, 2024 18:44

கந்தர்வன் அவர் என்ன சொல்ல வருகிறார் என்றாவது புரிந்து கொள்ளாமல் தூற்றுகிறீர்கள்.


Barakat Ali
அக் 25, 2024 10:53

பணத்துக்கு ஆசைப்பட்டு வாக்களித்து விட்டோமே என்று தமிழக வாக்காளர்கள் இப்போது வருந்தி என்ன பயன் ?


kantharvan
அக் 25, 2024 12:23

தம்பி பரக்கத் மதம் அபின் போன்றது அதை அறியாமல் உண்டதால் இன்று ஒட்டுமொத்த தேசமும் அவதியுறுகிறது என்பதை வடக்கே உணர ஆரம்பித்து விட்டார்கள். தெற்கே இங்கே பல ஆண்டுகளுக்கு முன்னே மக்கள் தெளிந்து விட்டார்கள். விரைவில் தமிழ் நாடு இந்தியாவின் பொருளாதாரத்தில் முதன்மை மாநிலம் ஆகும் அதனை விரைவில் காண்பீர் .


Sathyanarayanan Sathyasekaren
அக் 25, 2024 18:49

கந்தர்வன், நீ கண்களை மூடிக்கொண்டால் உலகம் இருந்ததாக அர்த்தம் கிடையாது. தமிழகத்தில் கலாச்சார சீர்கேடு நீ சொன்னவர்களால் தான். உன் தலைவர்கள் ஹிந்து மதத்தை மட்டும் அழிக்க நினைப்பது ஏன்? உனக்கு தெரியாதா? பிற அந்நிய நாட்டு மாதங்களில் உள்ள செயல்களை பற்றி வாய் திறப்பது இல்லை. ஏனனென்றல் உங்களுடைய குடும்பத்திற்கு சோறுபோடுவது அவர்கள்தானே. அந்நிய நாட்டு மதங்களை ஆதரித்தால் நீ அறிவாளியா ? அந்நிய நாட்டு மதங்களை பற்றி பேச தைரியமில்லாத தலைகள் நீங்கள்.


kantharvan
அக் 25, 2024 09:34

மூட நம்பிக்கைகளே காரிருள் அந்த காரிருளை ஒழிக்க வந்த சூரியன் அதுவே பகுத்தறியும் அறிவு. மெக்காலே ஓவியம் போன்ற பொக்கிஷங்களை களவாடினாலும் இறுதியில் விழியை கொடுத்தான். அந்த அறிவு என்னும் விழியே இன்று நல் வழியானது .ஆனால் கண்ணிருந்தும் குருடராய் வாழும் சனாதனிகளிடம் நம் வாதம் எடுபடாது. அந்த காரிருள் எல்லாவற்றையும் விட பெரியது முடிவும் தொடக்கமும் இல்லாதது என்றும் அழிவே இல்லாதது எல்லாவற்றையும் விட பெரியது நிலைத்தது என்று எண்ணுபவர்கள். அக்னி குஞ்சு ஒன்றை கண்டால் இந்த காரிருள் எல்லாம் கலைந்து ஓடும் தம்பி.


kantharvan
அக் 25, 2024 09:27

அது என்ன திராவிட ஆட்சியில்தான் ஊழல் என்று வடிகட்டிய பொய் புழுகுவது இந்தியாவின் முதல் நிதி மந்திரி டி டி கே காலத்திலே முந்த்ரா ஊழல் நடந்ததே வரலாறு முக்கியம் அமைச்சரே??


kantharvan
அக் 25, 2024 09:23

ஒரே இரவில் பணத்தை செல்லாத காசாக்கும் அதிகாரம் கொண்ட நபர் மதுவிலக்கை நாடெங்கும் அமல்படுத்தலாமே?? நாடெங்கிலும் மதுவிலக்கை அமல்படுத்தாமல் இருக்க பிரதமர் கைகளை தடுப்பது எது??? அறமற்ற மணி இங்கே இத்தனை கேள்விகள் கேட்ட மணி பாண்டிச்சேரியில் இதை செயல்படுத்த சொல்வாரா ???


Sathyanarayanan Sathyasekaren
அக் 25, 2024 18:53

கந்தர்வனுக்கு இன்று குர்ட்டருக்கு பதிலாக ஒரு FULL கிடைத்துவிட்டது போல புலம்பிக்கொண்டு இருக்கிறான். திருட்டு திராவிட கழிசடைகள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வக்கில்லை என்பதை மறைக்க மத்திய அரசின் மீது பழி போடப்பார்க்கிறார். கொத்தடிமைகள் இழந்த கருப்புப்பண ஏக்கம் இன்னும் போகவில்லை போல அதுதான் இன்னும் பணமதிப்பிழப்பு பற்றி புலம்புகிறான். . உழைத்து குடும்பத்திற்கு சோறு போடு.


kantharvan
அக் 25, 2024 09:21

விவசாயிகளை இன்னும் பிச்சை வாங்கும் நிலையில் வைத்திருப்பது யாரய்யா காரணம்??


kantharvan
அக் 25, 2024 09:18

என்ன காலை சிற்றுண்டி தட்டேந்தும் திட்டமா? அப்போ இதில் மத்திய அரசுக்கு பங்கு இல்லையா? ஏனப்பா மோடி அறிமுக படுத்தினால் அது அட்சய பாத்திரம் ஸ்டாலின் அறிமுகப்படுத்தினால் அது பிச்சை பாத்திரமா ??


kantharvan
அக் 25, 2024 09:16

மணி ..திராவிடம் ஆலமரம்தான் கொக்கென்று நினைத்தாயோ கீழ்மகனே ??


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை