உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / தாராளமாக நிதி உதவி தரலாமே!

தாராளமாக நிதி உதவி தரலாமே!

கு.அருண், கடலுாரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மத்திய அரசிடம், வெள்ள நிவாரண நிதியாக, 2,000 கோடி ரூபாய் கேட்டுள்ளது, தமிழக அரசு. மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், பல ஆயிரம் பேர், தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து, அடுத்த வேலை உணவுக்கு கூட வழியில்லாத நிலையில் உள்ளனர். அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டிய ஆளுங்கட்சியினரோ, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று, புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருக்கின்றனரே தவிர, உருப்படியாக ஏதும் செய்வதாக தெரியவில்லை. புதுச்சேரி அரசு, மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, தலா, 5,000 ரூபாய் கொடுக்கும் நிலையில், தமிழக அரசோ, வெறும், 2,000 ரூபாய் கொடுக்க முன்வந்துள்ளது. இப்பணத்தை வைத்து, என்ன செய்து விட முடியும்? நிலைமை இப்படி இருக்க, தன் கட்சியினருக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய முதல்வர் ஸ்டாலின், புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, தன் ஒரு மாத ஊதியமான, 80,000 ரூபாயை, வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார். ஆக, பெரும் தொகை தான் முதல்வரே...'டிவி' நடிகர் பாலா, ஒவ்வொரு இயற்கை பேரிடர் காலங்களிலும், தான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாரி வழங்குகிறார். ஆனால், ஆளும் கட்சியினருக்கும், ஆண்ட கட்சியினருக்கும் கிள்ளிக் கொடுக்கக் கூட மனம் வரவில்லை.ஒரு சாதாரண நடிகர், தன் சக்திக்கும் மீறி மக்களுக்காக செலவு செய்கிறார் எனும் போது, ஆட்சி அதிகாரத்தில் உள்ள முதல்வரும், அதிகாரத்தை வைத்து கல்லா கட்டும் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களும் எவ்வளவு நிதி கொடுத்திருக்க வேண்டும்...பாதிக்கப்பட்ட மக்களின் கஷ்டம் முதல்வருக்கு புரிந்திருந்தால், தன் கட்சி மாவட்ட செயலர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,கள் என அனைவரையும், பாதிப்பு அடைந்த கிராமங்களை தத்தெடுத்து, அனைத்து உதவிகளையும் செய்ய வலியுறுத்தி இருந்திருக்கலாமே!முதல்வரும், குறைந்த பட்சம், 10 கோடி ரூபாய் கொடுத்து, தன் கட்சியினர் அனைவரையும் தாராள நிதி கொடுக்க வற்புறுத்தி, அதை அவர்கள் கையாலேயே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளிக்க செய்திருக்கலாமே!ஏன் முதல்வர் இதை செய்யவில்லை?

நொண்டி குதிரைக்கு சறுக்கியது சாக்கு!

ப.ராஜேந்திரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தமிழக அரசின் கொள்கை முடிவு என்பது பூரண மதுவிலக்கு தான்; இருப்பினும், தமிழகத்தில் மட்டும் இது சாத்தியம் கிடையாது. மத்திய அரசு இந்தியா முழுதும் இதை அமல்படுத்த வேண்டும். அப்போது தான், பூரண மதுவிலக்கு என்பது சாத்தியம்' என்று கூறியுள்ளார், தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி. கனமழையையும் பொருட்படுத்தாமல், டாஸ்மாக்கில், 'குடி' மகன்கள் குவியும்போது, மதுவிலக்கு எப்படி சாத்தியம் ஆகும்? மத்திய அரசு கொண்டு வந்தாலும், அது தமிழகத்திற்கு மட்டும் என்றுமே சாத்தியம் ஆகாது. காரணம், மதுக்கடைகளை திறந்து வைத்ததே, தங்கள் தானத் தலைவர், கலைஞர் கருணாநிதி தானே! நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், 'கழிப்பறை, டாஸ்மாக் கடைகளை தவிர, அனைத்து இடங்களுக்கும், கருணாநிதி பெயர் சூட்டப்பட்டு வருகிறது. 'உண்மையில், டாஸ்மாக் கடைக்கு கருணாநிதி பெயர் வைப்பது தான் பொருத்தமாக இருக்கும்!' என்று கூறியது போல், மதுவிலக்கு மாநிலமாக இருந்த தமிழகத்தை, மதுக் கடைகளை திறந்து வைத்ததன் வாயிலாக, இன்று, மது மிகு மாநிலமாக மாற்றிய பெருமைக்குரியவர்கள், தி.மு.க.,வினர் எனும்போது, கண்டிப்பாக அதற்கு தமிழகத்தில் சாத்தியமே இல்லை!'மதுவிலக்கை கொண்டு வருவோம் என்று கூறியதால் தான், 2016 சட்டசபை தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தோம்' என்கிறார், அமைச்சர். அப்படி இருக்கையில், 2021 சட்டசபை தேர்தல் வாக்குறுதியில், 'மதுக்கடைகளை மூடுவோம்' என்று எப்படி வாக்குறுதி கொடுத்தீர்கள்... குஜராத், பீஹார், மிசோரம், நாகலாந்து போன்ற மாநிலங்கள் எல்லாம் எப்படி மதுவிலக்கை கொண்டு வந்துள்ளன? மதுவிலக்கை அமல்படுத்தும் மாநில அரசின் கைகளை, மத்திய அரசு கட்டிப் போட்டா வைத்திருக்கிறது? 'மதுவிலக்கை அமல்படுத்தினால், அண்டை மாநிலங்களில் இருந்து கள்ளச்சாராயம், கள்ளச் சந்தையில் விற்பனையாகும்' என்கிறீர்கள்... சில மாதங்களுக்கு முன், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் இறந்தனரே... அவர்கள் எல்லாம் அண்டை மாநிலத்தில் இருந்து வாங்கி குடித்து தான் இறந்தனரா அல்லது கள்ளக்குறிச்சி தமிழகத்திற்குள் தான் இல்லையா? வீதிதோறும் டாஸ்மாக் கடைகள் இருக்கும்போது, கருப்பு, ஆரஞ்சு, வெள்ளை நிறங்களில் குளிர்பானங்களை போல, வாணியம்பாடி பகுதிகளில், பாக்கெட்டுகளில், கள்ளச்சாராயம் டோர் டெலிவரி செய்யப்படுவதாக பத்திரிகை களில் செய்தி வருகிறதே... அது எப்படி? 'நொண்டி குதிரைக்கு சறுக்கியது சாக்கு' என்பது போல், தி.மு.க., அரசுக்கு, மத்திய அரசு ஒரு சாக்கு!

நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துமா?

வி.எச்.கே.ஹரிஹரன் திண்டுக்கல்லில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழ்நாடு என்பதை ஆங்கிலத்தில், 'டமில்நாடு' என்று எழுதி வரும் நிலையில், அதை, சரியாக ஆங்கிலத்தில் எழுதக்கோரி, செல்வகுமார் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், 2021ல் வழக்கு தொடர்ந்து இருந்தார். அரசு பரிசீலிக்க, நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அந்த உத்தரவு நிறைவேற்றப்படவில்லை. மனுதாரர் மீண்டும் நீதிமன்றத்தை அணுகினார். மனுவை, விசாரித்த நீதிபதிகள், 'மனுதாரர் கோரிக்கையை பரிசீலிக்கும் படி, நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை, அரசு நிறைவேற்றாதது ஏன்?' என, கேள்வி எழுப்பினர். மேலும், கோரிக்கையை மத்திய, மாநில அரசுகள் பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டனர். உயர் நீதிமன்ற உத்தரவுக்கே இந்த நிலையா? 'டமில்நாடு' என்பதை தமிழ்நாடு என்று மாற்ற, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது மகிழ்ச்சிக்குரியதே! அதேநேரம், சென்னை உயர் நீதிமன்றம், இன்னும் மெட்ராஸ் ஐகோர்ட் என்றே அழைக்கப்படுகிறதே... அதையும், தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என்று அழைக்க, மத்திய - மாநில அரசுகள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? அதற்கு, லோக்சபாவில், மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவைப்படுகிறதோ... அல்லது உச்ச நீதிமன்றம் இசைவு தேவையா? ஜனாதிபதியின் ஒரு அறிக்கை போதாதா? தமிழகத்திலிருந்து, 39 எம்.பி.,க்கள் லோக்சபாவிற்கு சென்றுள்ளனரே... அவர்கள் இதுபற்றி பேசி, தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என்று பெயரை மாற்றட்டுமே! செய்வரா?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

V RAMASWAMY
டிச 09, 2024 22:12

தேவையில்லாமல், அறுகதையற்றவர்களுக்கும், அனாவசியமாகவும், இலவசங்களையும் , லட்சம் லட்சமாக நிவாரண தொகைகளையும், விபத்தில் இறந்த குடும்பங்களுக்கெல்லாம் அரசு பணி என்றும் அறிவித்து, அரசு கஜானாவை காலி செய்யாமலிருந்தாலே, மத்திய அரசிடமிருந்து பணம் பெறவேண்டிய அவசியமில்லை, மாறாக மத்திய அரசுக்கு மாநில அரசு பங்காக பணம் கொடுக்கும் அளவுக்கு அதிக நிதி இருக்கும், அல்லது வளர்ச்சி பனிக்களுக்கு செலவு செய்து தமிழகத்தை வாய் வார்த்தையின்றி உண்மையாகவே சிறப்புற செய்யமுடியும். சீமான் அவர்களே, இதையும் சொல்லுங்கள்.


sankar
டிச 09, 2024 17:49

"மாவட்ட செயலர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,கள் என அனைவரையும், பாதிப்பு அடைந்த கிராமங்களை தத்தெடுத்து"- நல்ல யோசனை சார் - அப்புறம் அப்படியே ஸ்வாகா தான்


ellar
டிச 09, 2024 16:22

மெட்ராஸ் உயர் நீதிமன்றம் அல்லது சென்னை உயர்நீதிமன்றம் என்பதில் வழக்குகள் கையாளும் திறன் இல்லையோ அல்லது மக்களுக்கு நீதி கிடைப்பதில்லை என்ன மாற்றம் வந்து விடப் போகிறது இதுக்கெல்லாம் கடிதம் எழுதிக் கொண்டிருப்பதில் என்ன பிரயோஜனம்?


Barakat Ali
டிச 09, 2024 14:08

மதுவாலும், சூதாட்டத்தாலும் உங்களிடையே பகைமையும், பொறாமையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் ஞாபகத்திலிருந்தும் தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடவே நிச்சயமாக சைத்தான் விரும்புகிறான்.... ஆகவே அவைகளிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள் ........


Barakat Ali
டிச 09, 2024 12:00

லாட்டரி, ஆன்லைன் ரம்மி, ரேஸ் போன்ற சூதாட்டங்கள், மது போதை, விதவிதமான போதைப்பொருட்கள் அனைத்தும் ஹராம் என்னும் பிரிவில் வருகின்றன .... இவற்றை செய்து அதன்மூலம் பொருளீட்டும் ஆசாமிகளும், அரசுகளும் ஹராமி களே .... இவற்றை இஸ்லாமிய அன்பர்கள் எதிர்க்காமல் ஆதரிப்பதை எண்ணி வேதனைப்படுகிறேன் .... பின்னணிக்காரணம் நிச்சயம் இருக்கும் .....


kantharvan
டிச 09, 2024 11:29

மதுக்கடைகளை திறந்து வைத்ததே, தங்கள் தானத் தலைவர், கலைஞர் கருணாநிதி தானே என்ன ஒரு பித்தலாட்டம். டாஸ்மாக் தொடங்கியவர் ஜெயலலிதா தமிழ் நாட்டில் என்றுமே பூரண மதுவிலக்கு இருந்ததில்லை ?? பூரண மதுவிலக்கை அமல்படுத்த அன்றைய அரசிடம் மதுவிலக்கிற்கான சிறப்பு நிதியை பிற மாநிலங்களுக்கு தருவது போல தமிழகத்திற்கும் தர வேண்டினார் அன்றைய முதலவர் கருணாநிதி. தர மறுத்ததால்தான் மது விலக்கு தளர்த்தப்பட்டது அதன் பின்னர் பதவியேற்ற புர்ச்சி நடிகர்தான் மதுவை வளர்த்தார் அவர் வாரிசான ஜெ அதனை சட்டபூர்வ மாநில டாஸ்மாக் மாற்றினார் . இதுதான் பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம் என்பதோ??


gopalasamy N
டிச 09, 2024 17:22

கருணாநிதி மது கடைகளை முதலில் திறந்தார் ராஜாஜி எதிர்த்தும் அதை திறந்தது கருணாநிதி ஜெயலலிதா அப்போது அரசியலில் இல்லை


Anantharaman Srinivasan
டிச 09, 2024 23:33

கருணாநிதி சாரயகடைகளை திறந்தார். பின் அவரே மூடினார். பிரைவேட் மதுகடைகளை அரசு டாஸ்மார்க் கடைகளாக மாற்றியது மெத்த படித்த மேதாவி ஜெயலலிதா..


sankaranarayanan
டிச 09, 2024 08:50

அனைவரையும் தாராளமாக நிதி கொடுக்க வற்புறுத்தி பணம் வாங்க வைத்திடும் முதல்வருக்கு எல்லா நிதிகளும் முதல்வர் குடும்பத்திலேயே இருக்கும் பொது அடுத்தவர்களுக்கே கிடைக்காத பொது எப்படி அய்யா மக்களிடம் இருந்து நிதி திரட்ட முடியும்


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 09, 2024 08:36

தமிழகத்திலிருந்து, 39 எம்.பி.,க்கள் லோக்சபாவிற்கு சென்றுள்ளனரே. அவர்கள் இதுபற்றி பேசி, தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என்று பெயரை மாற்றட்டுமே... அவங்க மக்களவைக்கு போறதே கூச்சலுக்கும், டைம் பாஸ் க்கும் தான்.. ஆரியர்கள் திமுகவின் 39 எம்.பி.,க்கள் மீதே கண் வைத்துள்ளனர்.. பொறாமை .....


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 09, 2024 08:33

மதுவிலக்கை விலக்கி மதுவைத் தமிழகத்துக்குத் திறந்துவிட்டவர் எம்ஜிஆர் தான் என்று விதண்டாவாதம் செய்யும் நாகரிக கோமாளிகள் ஒன்றை மறந்து விடுகிறார்கள்... கொரோனா காலத்திலும் மதுவால் வரும் வருமானம் ஒரு கேடா என்று முகக்கவசம் அணிந்து, கையில் பேனரைத் தாங்கியபடி நின்றவர்கள் இவர்கள் ..... தங்கள் ஆட்சியில் இளம் விதவைகள் உருவாவதைத் தடுக்கலாமே ????


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 09, 2024 08:25

திராவிட மாடல் வாங்கிச் சிவந்த கரங்களை உடையது.. திராவிட மாடல் ஏன் கொடுக்கவில்லை என்று குசும்புத்தனமாகக் கேட்பது ஆரியர்களே... தமிழன் திராவிடத்தை நம்பி ஏமாறுவதை ஆரியர்கள் தடுப்பது ஆணவம் ....


சமீபத்திய செய்தி