வாசகர்கள் கருத்துகள் ( 3 )
மாணவர்களின் கற்கும் திறமையை சோதிப்பதற்காக தான் தேர்வுகளே நடத்தப் படுகின்றன. ஆல் பாஸ் என்று அறிவித்து விட்டால், எந்த மாணவனும் கஷ்டப்பட்டு படித்து, தேர்வு எழுத முன்வர மாட்டான். இந்த கொள்கையை முழுதும் செயல்படுத்தி திராவிட அரசு மாணவர்களின் எதிர்காலத்தையே பாழாக்கிவிட்டது எந்த துறையிலும் தரம் நிர்ணயிக்க ஒரு பரிசோதனை உண்டு அதை அகற்றி விட்டால் தரம் குறைந்துவிடும்.நாளைடைவில் மாணவர்கள் அடுத்தவர்களுடன் போட்டி போட முடியாமல் வாழ்க்கையே கெட்டுவிடும். திராவிட ஆட்சியில் ஐ.ஏ.எஸ் - ஐ.பி.எஸ். போட்டி பரீட்சைகளில் தேர்வு பெற்றவர்களின் எண்ணிக்கை வருடா,வருடம் குறைந்து கொண்டே போகிறது அதிகப்படியான இந்த போட்டித்தேர்வுகளில் மற்ற மாநில மக்கள் தேர்ச்சிபெற்று அவர்கள்தான் திராவிட ஆட்சியில் எல்லா முக்கிய மேல் பொறுப்புகளையும் நிறைவாக்குகின்றனர் இதற்கு காரணமே இந்த திராவிட ஆட்சியின் இருமொழி கொள்கையும் "ஆல் பாஸ்" என்ற கொள்கையும் மத்திய கல்வி பாடத்திட்டத்தை அமல்படுத்தாததுதான் காரணம்.
உஙகள் குழந்தைகள் படிப்பதற்காக வா பள்ளிக்கு வருகின்றன? ஆசிரியர்களை கலாய்ப்பது, டைம் பாஸ் பன்றது, விளையாட்டு , வேடிக்கை இதற்கு தான் வருகின்றனர். நன்றாக படித்து நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்று அறிவுரை கூறினால் நான் பிசினஸ் மேன் ஆகப் போறேன். அதற்கு படிக்க தெரிந்தால் போதும் என்கின்றனர். பெற்றோர் எனக்கு ஒரே பையன் படிக்காத விட்டாலும் பரவாயில்லை. அடிக்காதீர் என்கின்றனர்.. அவன் மட்டும் படிக்காமல் இருப்பதில்லை. மற்ற மாணவர்களையும் சேர்த்து படிக்க விடுவதில்லை. ஆசிரியர் கண்டித்ததால் அவர் நடத்துவதே புரியவில்லை என்று ஆசிரியருக்கும் சேர்த்து ஆப்பு வைத்து விடுகின்றனர். அப்புறம் எப்படி கல்வி அறிவு பெறுவது? அரசு கல்விக்கு என்று பல ஆயிரம் கோடி செலவு செய்து என்ன பயன்? அரசுப் பள்ளி ஆசிரியர்களின் ஊதியம் எவ்வளவு? இல்லம் தேடி கல்வி கற்றுத் தருபவர்களுக்கு மாதம் ஆயிரம். என்னே நியாயம்? ஏன் அந்தந்த ஊரில் இருக்கும் விதவைகள் மற்றும் ஏழை குடும்பத்தில் பிறந்த வேலை வாய்ப்பு இன்றி இருக்கும் பி.எட் பட்டதாரிகளுக்கு மாதம் 10,000 கொடுத்து இல்லம் தேடி கல்வி பணி வாய்ப்பு தந்தால் அரசுக்கு குறை ஏற்பட்டு விடுமா? அரசு பரிசீலிக்குமா?
படிப்பு என்பதே மிக அதல பாதாளத்துக்குப் போனதற்கு காரணம் இந்த 'தூக்கிப் போடும்' முறையே எட்டு வகுப்பு வரை அலட்சியமாக 'என்க வீட்டுக்காரரும் கச்சேரிக்குப் போறார் ' என்று பள்ளிக்குப் போய்விட்டு, ஒன்பதில் வெறும் அடிப்படை கணக்கு, ஆங்கிலம் கூடப் புரியாமல் தேர்வுகளிலும் பள்ளியின் தேர்வு விகிதத்தைக் கூட்டிக்காட்டும் நிர்பந்தத்தால் ஆசிரியர்கள் எல்லா தகிடுதத்தங்களும் செய்து தேர்ச்சி பெற்றால் ஒரு வரிகூட ஒழுங்காக எழுதிப் படிக்க இயலாத ஒரு தற்குறித்தலைமுறைதான் உண்டாக்கியுள்ளது எங்கள் வீட்டு உதவிப்பெண்ணின் மகள் + 2 தேர்ச்சி பெற்றவள் தனது தாயின் விடுப்புக்காக செய்தி அனுப்புகிறாள் : my mother deceased from yesterday She was back tomorrow என்ன ஒரு ஆங்கிலப் புலமை? இதிலும் 8 sepelling mistakes பிள்ளைகள் உருப்படாது, டாஸ்மாக் , drugs promoters ஆகவே இருக்க வேண்டும் என்றுதான் அரசு விரும்புகிறதோ ?
மேலும் செய்திகள்
மத்திய அரசு செய்யுமா?
26-Dec-2024