உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / கணக்கு ஒர்க் அவுட் ஆகாதே!

கணக்கு ஒர்க் அவுட் ஆகாதே!

நாமக்கல் மாவட்ட பா.ஜ., அலுவலகத்தில், புதிதாக கட்டப்பட்ட கூட்ட அரங்கு திறப்பு விழாவில், அக்கட்சியின் மாநில துணை தலைவர் ராமலிங்கம் பங்கேற்றார்.அப்போது அவர் கூறுகையில், 'தமிழகத்தில் பா.ஜ., வேகமாக வளர்ந்து வருகிறது என்பதை லோக்சபா தேர்தல் முடிவு காட்டுகிறது. 234 சட்டசபை தொகுதிகளில், மூன்றில் ஒரு பங்கான, 78 தொகுதிகளில், அ.தி.மு.க.,வை பின்னுக்கு தள்ளி, பா.ஜ., இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது. 'எங்கள் முக்கிய குறிக்கோள், 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வை ஆட்சியில் இருந்து அகற்றுவது தான். அதற்காக கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம். தேர்தல் நேரத்தில் சரியான கூட்டணியை கட்டமைப்போம்' என்றார்.மூத்த நிருபர் ஒருவர், 'லோக்சபா, சட்டசபை தேர்தலை தனித்தனியாக பார்க்கும் பக்குவம் உள்ளவர்கள் தமிழக மக்கள்... இவரோட இந்த கணக்கு, சட்டசபை தேர்தலில் ஒர்க் அவுட் ஆகாதே...' என, முணுமுணுக்க, சக நிருபர்கள் ஆமோதித்து தலையாட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

S Hariharasubramanian
ஜூலை 09, 2024 20:50

ஒரு கையில் காசு வைத்தால் தான் வோட்டு இது நம்ம மக்கள் பழக்கம்


D.Ambujavalli
ஜூலை 04, 2024 16:47

மக்களின் நாடியை நன்கு அறிந்து காசையும், பொருளையும், பாட்டிலையும் கொடுத்து வெற்றிபெற அறிந்த திராவிடக் காட்சிகள், நீங்களும் அந்த லெவலுக்கு இறங்கினால் ஒழிய வெற்றிபெற பக்கம் திரும்பக் கூட முடியாது தமிழ் வாக்காளர்களுக்கு ஒரு விலை உண்டு


M.S.Jayagopal
ஜூலை 04, 2024 08:33

தமிழக வாக்காளர்கள் சட்டசபை தேர்தலுக்கும் மக்களவை தேர்தலுக்கும் வேறுபாட்டை உணர்ந்து வாக்களிப்பார்கள் என்பது உண்மை அல்ல.


Sathyanarayanan Sathyasekaren
ஜூலை 04, 2024 02:05

நிருபர்கள் தமிழக அறிவாளி மக்களை புரிந்து கொள்ளவில்லை, தமிழக தற்போதைய அறிவாளிகளுக்கு 200ம் குவாட்டரும் போதும். திருடர்களுக்கு தான் வோட்டை போடுவார்.. இல்லையென்றால் மறுபடியும் 40 உதவாக்கரைகளை டெல்லிக்கு அனுப்புவார்களா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை